Category: இலக்கியம்
-
மதியம். மழைத்தூறல். பிரயாணம்.
மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். எதோ புதுப் பட பாடலில் வரும் கீச் கீச் சத்தமாகத்தான் இருக்க வேண்டும். காரின் பின்பக்க ஸ்பீக்கரிலிருந்து வந்ததால் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். மழைத் தூறலாயிருந்தது. ஏற்கனவே ஹைவே இல்லாத வழியாக ஜீபிஎஸ்ஸில் தேர்ந்தெடுத்திருந்ததால், வீட்டிலிருந்து ட்யூவால் சென்று, நாவல்டி வழியாக கார்னேஷனை கடந்து ஸ்னோக்குவாமி நோக்கி பிரயாணம். கிட்டத்தட்ட சென்னையிலிருந்து திருப்பதி செல்ல கும்மிடிப்பூண்டி கடந்து, காலஹஸ்தி போய் திருப்பிக்கொண்டு திருப்பதி வருவது போலத்தான். வழியெல்லாம் பாசி…
subbudu
-
காலச்சுவடிலிருந்து புத்தகங்கள்
ஆறுமாதங்களுக்கு முன் ஆன்லைனில் காலச்சுவடு புத்தகங்கள் சிலவற்றை வாங்கியிருந்தேன். சிறப்பாக அட்டை பேப்பர் கட்டி சென்னைக்கு அனுப்பியிருந்தார்கள். அம்மா அவற்றை மர பீரோவில் பூட்டி வைத்திருந்தாள். சென்னைக்கு வந்த மறுநாள் காலையில் காபி குடித்தபடி தினத்தந்தியில் போதைப்பவுடர் பறிமுதல், குஷ்புவின் ஆஸ்பத்திரி அனுமதி, பெங்களூரு ரேஸ் டிப்ஸ், போலி நோட்டுகள் பரபரப்பு என்ற பல முக்கிய செய்திகளை தொடர்ந்து, கன்னித்தீவு 22431ம் (60 ஆண்டுகளாக) பகுதியை படித்தவுடன் வரி விளம்பரங்களை துழாவினால் சில முத்துக்கள் அகப்பட்டன –…
subbudu
-
என் இனிய ஜீனோ!
“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது. நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’ ‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ? ’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’ ‘பார்த்தீர்களா!’ ‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா. ‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது…
-
இன்ன பிற – தேசபக்திக்காக ஒரு தடுப்பூசி
போன மாதம் ஆப்கானிஸ்தானில் சரித்திரம் புரண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே இந்தியர்கள் ஜனகணமன பாடி, சாக்லெட்டை விழுங்கி, அதன் ப்ளாஸ்டிக்கை கசக்கி கீழே போட்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்தும் அச்சுபிச்சுத்தனமாக இரவில் வாங்கினோம் இன்னமும் விடியவேயில்லை என்று பேசிக்கொண்டிருக்கும் திராபைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தியாவைப் போல் ஒரு சுதந்திரமான நாடு எங்குமேயில்லை. தனி மனித சுதந்திரத்தை நாம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டோம். எந்த…
-
வாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலின் குடமுழுக்கை 144ஐ போட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தி நல்ல வெயில் அடிக்கும் நாளில் பிரகாசமாய், பிரமாதமாய் நடத்தியதை பொதிகையில் காணப்பெற்றேன். இந்த தொற்று நாட்களில் இம்மாதிரி கட்டுப்பாடுகளை விதிப்பது தவிர்க்கமுடியாதது தான். தொற்று பற்றற்று போனவுடன் கும்பாபிஷேக கோயிலை போய் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பலப்பல ட்ரோன்கள் சமேதமாக சுத்தி சுத்தி விமானத்தையும் ராஜ கோபுரத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல. பொதிகையில் கொஞ்சம் சத்தமாய் கூடவே உரை…