Category: எழுத்தாளர்கள்
-
சென்னையிலிருந்து புத்தகங்கள்
ஜூலை மாதத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிய புத்தகங்களை பிரித்து பார்க்க இப்போது தான் கை வந்தது. மே மாதம் சென்றிருந்த போதே அப்பா, “எதோ புக்கெல்லாம் வந்திருக்கு, போகும் போது எடுத்துண்டு போ” என்று அமேசான் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறந்து போய் வந்துவிட, ஜூலையில் கவர்ந்து கொண்டு வந்தேன். அவுட் ஆஃப் பிரிண்ட் ஆகிவிடக்கூடிய சாத்தியம் உடைய புத்தகங்களை அவ்வப்போது பல்வேறு பிரசுரங்களிடமிருந்து ஆர்டர் செய்து வீட்டுக் அனுப்பி, முடிந்த போது ப்ளைட்…
-
நமக்கு ஏன் இசை பிடிக்கிறது?
ஆர்தர் சி. கிளார்க்கின் Childhood’s end என்ற நாவலில், ஆறிவுஜீவிகளான வேற்றுகிரகவாசிகள் சிலர் ஒரு கச்சேரியில் கலந்துகொள்ள பூமிக்கு வருகிறார்கள். கச்சேரியின் இறுதியில், இசையமைப்பாளரை வாழ்த்துகிறார்கள் ஆனால் இன்னும் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. மனிதர்கள் இசையை உருவாக்கும்போது அல்லது கேட்கும்போது என்ன நடக்கிறது என்று அவர்களால் சிந்திக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதே இசையைக் கேட்கும் பொழுது அவர்கள் மனதில் எதுவுமே நடப்பதில்லை. அவர்களுக்குள் இசை என்றே ஒன்று இல்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு தங்கள் விண்கலங்களில்…
-
முராகமியின் டீஷர்ட்
நான் எழுதிக் கொடுத்தால் என் வீட்டு சலவைக் கணக்கைக் கூட பதிப்பிக்கத் தயாராக இருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் என்று ஒருமுறை நகைச்சுவையாக எழுதியிருந்தார் சுஜாதா. ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி, சுஜாதா போலவே பிரபலமானவர். ஜப்பானையும் தாண்டி உலகப் புகழ் பெற்றவர். இவர் எழுதினால் யாரும் எதை வேண்டுமானாலும் பதிப்பிக்க ரெடி. முராகமி கொஞ்சம் விவகாரமான ஆசாமி. அவர் எழுத்தைப் போலவே கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் தான் சேகரித்து வைத்திருக்கிற டீஷர்ட்டுகளை பற்றி ஒரு புத்தகம் போட்டார்.…
-
என் இனிய ஜீனோ!
“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது. நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’ ‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ? ’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’ ‘பார்த்தீர்களா!’ ‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா. ‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது…
-
இன்ன பிற – தேசபக்திக்காக ஒரு தடுப்பூசி
போன மாதம் ஆப்கானிஸ்தானில் சரித்திரம் புரண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே இந்தியர்கள் ஜனகணமன பாடி, சாக்லெட்டை விழுங்கி, அதன் ப்ளாஸ்டிக்கை கசக்கி கீழே போட்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்தும் அச்சுபிச்சுத்தனமாக இரவில் வாங்கினோம் இன்னமும் விடியவேயில்லை என்று பேசிக்கொண்டிருக்கும் திராபைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தியாவைப் போல் ஒரு சுதந்திரமான நாடு எங்குமேயில்லை. தனி மனித சுதந்திரத்தை நாம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டோம். எந்த…