Tag: ponniyin selvan
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 4
4 கனவென்றால் சும்மா காமா சோமா கனவல்ல. கிட்டத்தட்ட 40 வருடங்களாக வளர்த்திருந்த கனவு. நேற்று புத்தகத்தைப் புரட்டி விட்டு, இன்று காலை வரை மோவாயைத் தடவிக் கொண்டு மோட்டுவளையத்தை பார்த்த பின் எடுத்த முடிவல்ல. மணி ரத்னம் சொன்னது போல, கல்லூரி நாட்களில் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் பொ.செ. புத்தகத்தை எடுத்துப் படித்த போது வந்த கனவு. “இதற்காகத் தான் சினிமா எடுக்கவே வந்தேன்” என்ற வாக்கியத்தைத் தவிர எல்லாவற்றையும் சொல்லி விட்டார். 80களில் கமலஹாசனைக்…
subbudu
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 2
2 மணி ரத்னத்தின் எந்தப் படம் வெளி வருவதற்கு முன்னும் பின்னும் விமர்சனம் வந்தே தீரும் என்பதைக் கடந்த மூன்று பத்தாண்டுகளில் பார்த்திருக்கலாம். விமர்சகர்களும் அ-விமர்சகர்களுக்கும் ஒரு ஏற்ற இலக்காக அவர் படங்கள் இருப்பதே காரணம். ஆளாளுக்கு அல்வா கிடைத்த மாதிரி பந்தாடித் தீர்ப்பார்கள். அவரின் பிரபலம் அவருடைய எல்லா படத்துக்கும் ஒரு விதமான liability தான். முதலில் மெளன ராகத்திற்கு பிறகு ”தமிழ் நாட்டில் விவாகரத்து கேஸ்கள் அதிகமாகிறது” என்றார்கள். பிறகு அஞ்சலியில் ”வயதுக்கு மீறி மைனர்…
subbudu
-
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 1
1 ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, புரசைவாக்கத்திலிருந்த இந்தி டீச்சிங் சென்டரில் பிரவேஷிகாவோ என்னவோ படித்துக் கொண்டிருந்தேன். ரொம்பவும் போர் அடிக்க ஆரம்பித்ததால், க்ளாஸ் போவதை நிறுத்தி விட்டேன். அம்மாவோ இந்தி படித்திருந்தார். “விட்றாத படி படி” என்றபடி சொல்லிக் கொண்டிருந்தாள். கங்காதீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் ஏராளமான யுவ-யுவதிகள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருந்தேன். சைக்கிளில் ஒரு நாள் கோவிலுக்குச் செல்லும் போது அங்கே நின்று என்ன வகுப்புகள் நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க…