kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • January 19, 2007

    அசோகமித்திரன் – தீராநதி – நேர்க்காணல்

    ashokamitran theeranadhi

    ashokamitran theeranadhi

    தீராநதியின் ஜனவரி இதழில் வந்துள்ள அசோமித்திரனின் நேர்காணல், சில காலமாய் போரடித்துக் கொண்டிருந்த அந்த இலக்கிய இதழுக்கு உயிருட்டக்கூடியது. அசோகமித்திரனின் பேச்சை ஒரு முறையாவது கேட்டவர்கள், இந்த நேர்க்காணலை படிக்கும் போது அவருடன் உரையாடுவது போலவே இருப்பதை அறிவர். வழக்கம்போல எளிமையான் பேச்சும், மற்றவரை கேலி செய்யாத கருத்துக்களும், செறிவான அனுபவங்களும் நிறைந்தது இப்பேட்டி.

    தற்போதை புத்தக பதிப்புத் தொழில் பற்றிய தனது ஆர்வத்தை முன்வைக்கும் போது நிறைய புத்தகம் விற்பது சந்தோஷமாக இருந்தாலும், அவை படிக்கப்பட வேண்டும் என்ற கவலையை முன்வைக்கிறார். சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் தனக்கு உவப்பாக இல்லாத போதிலும், அது அவருடைய தனிப்பட்ட சாய்ஸ் என்கிறார்.

    எளிமையும், கவலையும் கலந்த ஒரு ஆழ்ந்த அனுபவ பகிர்வு.

  • January 15, 2007

    புதுப்பேட்டை

    pudupettai

    போன வருடம் வந்த படங்களில், எந்த படம் சிறந்த படம் என்று ஏகத்துக்கு எழுதி குவித்து விட்டார்கள். டீவிடி அட்டைகளுக்கு கதை சுருக்கம் எழுதுபவர்கள் கூட விமர்சகர் போர்வையில் தமிழ் சினிமா விமர்சனம் எழுதும் இந்த கலேபர காலத்தில் உண்மையான சிறந்த படம், கவனிக்கப்படுவது கடினமே.

    போன வருடத்தில் நிறைய தமிழ் படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், பார்த்த பத்து பன்னிரண்டில் பிடித்தது இவ்விவை. புதுப்பேட்டை மற்றும் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. இவ்விரண்டும் எந்த லிஸ்டிலும் அதிகம் இடம் பெறாதது துரதிஷ்டவசமே.

    புதுப்பேட்டை ஓடவில்லையென்று கோவித்துக் கொண்டு, கல்யாணம் முடிந்தவுடன் இந்திப் பக்கம் போய் விட்டார், இயக்குநர் செல்வராகவன். ஏ ஆர் ரகுமானுடன் சேர்ந்து Macbeth என்னும் இந்திப் படம் செய்வதாய் கேள்வி.

    என்ன தான் மேற்கத்திய படங்களில் இருந்து ஓரிரண்டு சீன்களை சுட்டாலும், புதுப்பேட்டையில், உண்மையை கசக்க கசக்க சொல்லியிருக்கிறார். “இது உன் பிரச்சனை குமாரு. நீ மூர்த்தி தம்பிய போட்ட அவங்க உன்ன போடறதுக்கு அலயரானுங்க. இதுல நாங்க உள்ள பூந்தா கேங் வாராயிட்டும்” என்ற வசனங்கள் தமிழர்களுக்கு அலுத்து விட்டாலும், ஒரு தாதாவிற்குள்ளே இருக்கும் உண்மையான மரண பயத்தை காண்பித்த செல்வராகவன் இன்னும் இரண்டு ப்ளாப் கொடுத்தாலும் பரவாயில்லை.

    க்ளாசுக்கு போகாமல் படிச்ச நாய்களை கிட்டே வராமல் விரட்டியடிக்கும் குமார், கொக்கி குமாராகும் குற்றச் சரித்திரம் தான் படம். பாத்திரங்களின் வார்ப்பிலும், சட்டென்று ஏதிர்பாராமல் கட் செய்யப்படும் காட்சிகளிலும், பிஜியெம்மிலும், கமலின் நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் பாடலிலும், காட்பாத்ர் ஸ்டைலில் தந்தையை கொல்லும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் ஸ்லைடிலும் மற்றும் சில செல்லுலாய்ட் கணங்களிலும், தமிழ் சினிமா புதிய உயரங்களுக்கு சென்றது. சினேகா தான் படத்தின் வீக்கெஸ்ட் லிங்க். மற்றபடி வருடம் ஒரு படம் இப்படி non-judgementalஆக வந்தால் ‘ஓஹோ’ தான்.

    போன வருடத்தில் சிறந்த படப்பதிவு செய்யப்பட்ட பாடல் இடம் பெற்ற படமும் புதுப்பேட்டை தான். இரண்டு பாடல்கள் பிடித்தன. ஒன்று புல் பேசும் பூ பேசும். இரண்டு நெருப்பு வாயினில்.

    ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ ஒரு சுமாரான போரடிக்காத படமாயிருந்தாலும், ஹீரோக்கள் தாதாக்களாக மாறும் தமிழ் சினிமாவிலிருந்து இது ஒரு எஸ்கேப் பாண்டஸி. இந்தியில் இந்த பார்மேட் படங்களுக்கு ஏக கிராக்கி. இதே படத்தை கொஞ்சம் காசு போட்டு, இந்திக்கார குட்டிகளை வைத்து எடுத்தால் பாம்பே மல்டிப்பிளக்ஸில் கூட்டம் அம்மும்.

    ஆங்காங்கே ‘அட’ போட வைத்த புது இயக்குநர் விஜய் மில்டனுக்கும், புது ஐடியாக்கள் கொண்ட புது பசங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால், இது போன்று சில டஜன் படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் சில்லரை பார்க்கலாம். இல்லாவிட்டால் ஷங்கரும், கெளதமும் ப்ளாக்பஸ்டர் எடுக்க காத்து கொண்டிருக்க வேண்டியது தான்.

    இவை தவிர பார்த்து ரசித்த மற்ற படங்கள் – பட்டியல்(விஷ்ணுவர்தனுக்கு தமிழ் சினிமாவின் மசாலா பார்மேட் புரிந்திருக்கிறது), இம்சை அரசன் 23ம் புலிகேசி(சிரிப்புத் தோரணமான ஒரு நல்ல படம்) மற்றும் திருட்டுப் பயலே(நன்றாக ஆரம்பித்து கடைசியில் சற்றே சொதப்பியது. நடிக்காமல் போனால் சுசி கணேசனுக்கு தமிழ் சினிமாவில் சான்ஸுண்டு).

  • January 12, 2007

    மணியும் ரத்தினங்களும்

    ஆடிக்கொரு முறை தான் வரும் மணி ரத்னத்தின் படம். அவர் படம் பற்றி அவரை விட மற்றவர்கள் நிறைய பேசுகிறார்கள். “…த்தா படன்னா இப்படி நச்சுனு இருக்கணுன்டா” என்று விடலைகளும், “மனிஷாவும் அரவிந்த்சாமியும் மீட் பண்ணும் போது காமிரா என்னமா திரும்பறது, அப்சலூட்ளி கார்ஜியஸ்” என்று இன்னோவா ஓட்டும் லயன்ஸ் க்ளப் மாமிகளும், “ஆய்த எழுத்தின் பின்னணியில் நடப்பு அரசியலின் சுயநலமும், இலக்கமற்ற வெற்று கோஷங்களும், அதிகார வெறியும் விஷயங்களை மொண்ணையாக புரிந்து கொள்ளும் மெளடீகமும் உள்ளன என்பதை காட்டி அவை வென்றெடுக்கப்பட வேண்டியவை எனவும் முன்மொழிகிறார் இயக்குநர்” என்று மணி ரத்னத்துக்கே குழப்பம் வர பேசும் எலக்கிய விமர்சகர்களும் பேசுவதை பற்றி ஜு.வி டயலாக்கே எழுதலாம்.

    ஆனால் மணியோ ரத்தினம் உதிர்ப்பது அரிது. படம் வரும் போது மட்டும், ஆனந்த விகடன் ரிப்போர்டரையும் குமுதம் எடிட்டரையும் back-to-back சீத்தம்மாள் காலனி ஆபிஸில் சந்தித்து, தேவையான அளவு படத்தை பற்றி பேசி, இருக்கிற ஹைப்பில் எண்ணெய் ஊற்றுவார்.

    இந்த முறை வரும் குரு ஒரு இந்திப் படம். ஆதலால் rediff ரிப்போர்டருக்கு நேரம் ஓதுக்கி இண்டர்வியு. Rediffவும் விடாமல் அதை ரெண்டு பாகமாக்கி சில பல ஆயிரம் page hitsகளை அதிமாக்கி கொண்டார்கள். முதல் பாகத்தில் குரு படம் பற்றியும், இரண்டாம் பாகத்தில் சினிமா பற்றியும் பொழுது போக்கு சினிமா பற்றியும் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமே கவர்ந்தது. கொஞ்சமாய் புள்ளரிக்கிறது.

    பேட்டியிலிருந்து –

    What is more important, the content or the format?

    Content, of course. Format is just the language. Content is the only thing that is important. Form is like handwriting. Whether you write in a scribble or clean handwriting or type it, the content remains the same. You want to write in clean hand, in a kind of a clear format only because it is aesthetically pleasing. I can scribble, that’s also fine.

    Was it a conscious decision on your part to choose such clean handwriting?

    I don’t know. That is how I have liked cinema. I have liked movies that have been made well, crafted well, presented well, and which have a kind of aesthetics and quality in every department. That is where I am trying to reach. I feel you can reach all those standards.

    அவ்வப்போது இப்படி பேசுங்கள் மணி. கேட்க / படிக்க / பார்க்க நாங்கள் ரெடி.

  • January 8, 2007

    ஓட வைக்கும் பாடல்

    செங்காந்தள் இதழ் என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ்
    மின்காந்தப் பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ்
    நீ கொஞ்சம் நாடக தமிழ்
    நீ கொஞ்சம் மன்மத தமிழ்
    உன் தமிழ் என் தமிழ்
    T-A-M-I-L
    தமிழ்

    நாலு நாளாய் டிரட்மில்லில் ஓட வைக்கும் இந்த ‘தமிழ்’ வரிகள், மணிசர்மாவின் இசையில், ரஞ்சித்தும் ஸ்வேதாவும் பாடிய ‘நீ முத்தம் ஒன்று கொடுத்தால்’ என்ற பாடல். இடம்பெற்ற திரைப்படம் போக்கிரி. ஹியர் போனில் இருந்து சத்தம் வழிந்து, ஒன்ஸ்மோருடன் நான்கு முறை ரசித்துக் கேட்டவர்கள் மற்ற ஜிம் அன்னியர்கள்.

  • January 6, 2007

    எனக்குள் நான் – பாலகுமாரன்

    balakumaran.jpg

    “I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.

    உங்களுக்கு பாலகுமாரனை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தவற விடக்கூடாத ஒரு monologue பேட்டி இது.

    இந்த முப்பது நிமிடத்தில் ஆன்மீகம், இறைவன், குருநாதர், குடும்பம், வாழ்க்கை பற்றியெல்லாம் நிறைய பேசினாலும், தான் படைப்பாளியான கதையை சொல்லும் அந்த ஐந்து நிமிடம் மிக சுவாரசியம். மேலிருக்கும் வார்த்தைகளை அவர் egoவோடு சொல்லவில்லை என்பது பார்த்தால் புரியும். ஆறு பாகம் உடையார் எழுதி முடித்ததை பற்றி சந்தோஷப்படுகிறார். 237 நாவல்களும் மணிமணியான நாவல் என்கிறார்.

    இன்றுவரை குமுதம் வெப் டீவி, ஆனந்த விகடனை தாண்டி செல்ல வேண்டும் என்ற குமுதத்தின் ஒரு மார்கெட்டிங் முயற்சி என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று நிதானமாக பல வெப் டீவி நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் அதில் உள்ள ஆர்வம் தெரிகிறது. ரவி பெர்னாடின் பேட்டிகளில் கொஞ்சம், மற்றவரை பேச அனுமதிப்பாராயின் நலம். இன்று பார்த்த கவிஞர் வாலியின் பேட்டியிலும், அன்று பார்த்த பா ராகவனின் பேட்டியிலும் அவர் நடுநடுவே பேசியதால் சில சுவாரசியங்கள் மிஸ்ஸிங். மற்றபடி, வெப் டீவியிலும் மெகா சீரியல்கள் வந்துவிடாமலிருந்தால் சரி.

←Previous Page
1 … 85 86 87 88 89 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar