அசோகமித்திரன் – தீராநதி – நேர்க்காணல்

ashokamitran theeranadhi

ashokamitran theeranadhi

தீராநதியின் ஜனவரி இதழில் வந்துள்ள அசோமித்திரனின் நேர்காணல், சில காலமாய் போரடித்துக் கொண்டிருந்த அந்த இலக்கிய இதழுக்கு உயிருட்டக்கூடியது. அசோகமித்திரனின் பேச்சை ஒரு முறையாவது கேட்டவர்கள், இந்த நேர்க்காணலை படிக்கும் போது அவருடன் உரையாடுவது போலவே இருப்பதை அறிவர். வழக்கம்போல எளிமையான் பேச்சும், மற்றவரை கேலி செய்யாத கருத்துக்களும், செறிவான அனுபவங்களும் நிறைந்தது இப்பேட்டி.

தற்போதை புத்தக பதிப்புத் தொழில் பற்றிய தனது ஆர்வத்தை முன்வைக்கும் போது நிறைய புத்தகம் விற்பது சந்தோஷமாக இருந்தாலும், அவை படிக்கப்பட வேண்டும் என்ற கவலையை முன்வைக்கிறார். சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் தனக்கு உவப்பாக இல்லாத போதிலும், அது அவருடைய தனிப்பட்ட சாய்ஸ் என்கிறார்.

எளிமையும், கவலையும் கலந்த ஒரு ஆழ்ந்த அனுபவ பகிர்வு.

Create a website or blog at WordPress.com