Skip to content

kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • March 17, 2007

    பின் கதைச் சுருக்கம்

    தீவிரவாதம், முதலாளித்துவம், எல்லை, யுத்தம் என்றெல்லாம் பரபரப்பு கட்டுரைத் தொடர் எழுதும் பா. ராகவனின், எழுத்தாளர்கள் பற்றிய ஒரு அமைதிப் புத்தகம், பின் கதைச் சுருக்கம். கல்கியில் தொடராய் வந்து வரவேற்பு பெற்றதாக பின் கதைச் சுருக்கத்தின் முன்னுரை கூறுகிறது.

    17 நாவலாசிரியர்கள். 17 நாவல்கள். ஒரு இணைக்கும் பாலம். அனுபவங்கள். இதிலுள்ள 17 நாவலாசிரியர்களையும் அவர்களின் ஒரு நாவல் பற்றிய சிறு குறிப்பும், அந்த நாவலுக்கு பின்னுள்ள சில ஆழ்ந்த அனுபவங்களுமே இதன் களம். இதிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஒரு பர்சனல் பையஸுடன் தேர்ந்தேடுத்ததாக எழுதுகிறார் பா ரா.

    தனது சொந்த நாவலான, அலை உறங்கும் கடல், எழுதுவதற்கு உதவிய ராமேஸ்வர அனுபவங்களில் இருந்து ஆரம்பிக்கும் முதல் கட்டுரையும், பா ராவும் அவர் நண்பன் வெங்கடேஷும் ஒரு வாரம் ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு கன்யாகுமரியில் ஒரு ideal placeல் நாவல் எழுத சென்ற கட்டுரையும் மிகப் பிடித்தமானவை. எழுதறதுனா இன்னா சார் ? என்று கேட்பவர்கள் இந்த கட்டுரைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

    அசோகமித்திரனின் ஒற்றன் நான் மிக விரும்பி படித்த புத்தகம். அதை அலசி ஆராய்ந்த பத்தியை படித்தால், ராகவனுக்கு அந்த புத்தகம் ஏன் பிடித்தது என்று புரியும். ஜீன்ஸ் போட்ட அகத்தியர் என்று நாகூர் ரூமியை குறிப்பிடும் அத்தியாயத்தில் ரூமியின் குட்டியாப்பா நாவலுக்கான பிண்ணனியை சுவையாக விளக்குகிறார்.

    கொஞ்சமாய் மனங்கனக்க வைத்த அத்தியாயம் கேரள பஷிரை பற்றியது. தனது தியாக காதல்/காதலியை பற்றி எழுதிய சில டயரிக் குறிப்புகளிருந்து உருவான அனுராகத்தின் தினங்கள் நாவலின் பின்ணணி கதை. பஷிர் ஒரு sheer genius.

    இவை தவிர, இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள் எழுத வைத்த போலாந்து நாட்கள், கார்சியா மார்ககுவஸ் 100 years of solitude எழுத ஆரம்பித்த அந்த டிரைவிங் நொடி, மாலனை ஜனகணமண எழுத உந்திய ஒரு டைனிங் டேபிள் குடும்ப சண்டை, டால்ஸ்டாயின் resurrection நாவலின் அச்சுக் குழப்பம், சல்மான் ருஷ்டிக்கும் மிட்நைட்ஸ் சில்ட்ரன் நாவலின் சலிம் சின்னாய்க்கும் உண்டான தொடர்பு, ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் இலக்கிய வட்ட சர்ச்சை என்று சுவாரசியமான தேர்தெடுப்புகளின் இணைப்பு.

    கிழக்கு பதிப்பகத்தின் மிக சுமாரான மேல் அட்டை போடப்பட்ட புத்தகமும் இதுதான். எதோ விண்டோஸ் ஸ்கிரின்சேவர் போல ஒரு டிஸைன், பின் அட்டையில் படிக்க முடியாத சிறிய எழுத்தில், பாரா கையால் எழுதிய முன்னுரை. அடுத்த பதிப்பில் புத்தகத்தை ரீடிஸைன் செய்யலாம்.

    படித்து முடித்தவுடன், நாவல் வழியே வாழ்க்கை. வாழ்க்கை வழியே நாவல் என்ற இந்த புத்தகத்தின் tag-line புரிகிறது. மிகத் தெளிவாக.

  • March 16, 2007

    எம்பாட்டு ஜிம்பாட்டு !!

    ஜிம், எக்ஸர்சைஸ் எல்லாம் வீணர்கள் செயல் என்று நினைத்த காலமெல்லாம் போய், நாளொரு டிரட்மில்லும் பொழுதொரு ஸ்டிரச்சுமாகி விட்டது. முதன்முதலில் டிரட்மில் செய்ய ஆரம்பித்த போது, ஒன்றும் புரியாத பால காண்டத்தில், டீல் காத்தாடி பிடிக்க தப தப என்று தலைதெறிக்க வெள்ளாளத் தெருவில் ஓடியது போல, டிரட்மில்லில் ஏறிய நொடியில் இருந்து ஓட ஆரம்பித்தேன். இரண்டு நிமிடத்தில் ஆக்ஸிஜன் போதாமல் மூச்சடைக்க, கால் அகட்டி நின்றுவிட்டேன். இப்படியாக பத்து நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் போய், அதைவிடுத்து சைக்ளிங் செய்து கொண்டே எவ்ரிபடி லவ்ஸ் ரேமண்ட் பார்ப்பது வழக்கமாகி விட்டது. இது நடந்தது போன வருட ஆரம்பத்தில்.

    சில மாதங்களுக்கு பின் ஜிம்மே கசக்க ஆரம்பித்து, வீட்டிலேயே ரேமண்ட் பார்க்க ஆரம்பித்தேன். ஆறு மாதத்திற்கு முன்பு சினிமா பைத்தியம் முற்றி போய் ஆயிரம் பொன் கொடுத்து வாங்கின ஹெச்.டி.டி.வி புரஜெக்டர் வேறு ஜிம் போக விடாமல் முடக்கி போட்டது. இப்போதெல்லாம் லாஸ்டும், டெஸ்பரேட் ஹவுஸ்வொய்வ்ஸும் கூட புரஜெக்டர் பெரிய ஸ்கிரினீல் தான்.

    இரண்டொரு மாதத்திற்கு முன் பிலுபிலு என்று மனைவி பிடித்துக் கொண்டதால், ஜிம் வாசம் அதிகரித்தது. அதுவரை ஓடிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த St.Angerம், மெமரி ரிமைன்ஸும் போர் அடிக்க கொஞ்சமாய் தமிழ் ரீமிக்ஸ் பக்கம் தாவினேன். அதற்கு பின் எடுத்த ஓட்டம் இன்னும் நின்றபாடில்லை. சினிமா பாட்டு சாராயம் போல என்று பாலகுமாரன் எழுதியது நினைவுக்கு வருகிறது. அனாயசமாக ரீமிக்ஸுகிறார்கள். லூஸுப் பெண்ணையும் ரியல் ஸ்லிம் ஷேடியையும், இஞ்சி இடுப்பழகாவையும் நெல்லி புர்டாடோவையும் கிரியேட்டிவாக கலக்குகிறார்கள்.

    டிரட்மில்லில் போரடிக்காமல் ஓட வைக்கும் பாட்டுக்களுக்கு சில விதிமுறைகள் –

    கண்டிப்பாக அவை 120 BPM[beats/min] இருக்கவேண்டியது அவசியம். வெறும் instrumentalஆக இல்லாமல் பாடல்களாக, அதுவும் தங்கள் தாய்மொழியிலிருந்தால் சுபம். இருவிழி உனது இமைகளும் உனது போன்ற சோக ரொமாண்டிக் பாடல்கள் கேட்டால், டிரட்மில் தானாக நின்று விடும்.

    தத்துவ மற்றும் ஹீரோயிச பாடல்கள் தான் ஓட வைக்கும் நிஜ ஹீரோ. அதற்காக சத்தியமே லட்சியமா கொள்ளடா செல்லடா பாடல்கள் வீட்டோடு நிறுத்துவது நல்லது. ரஜினி/விஜய் படங்களில் இருக்கும் அத்தனை introduction பாட்டுக்களும் கட்டாயம். கமலில் 80களின் டிஸ்கோ பாடல்களில் சில கலக்கல்.

    அட!! அச்சமில்லை அச்சமில்லை சொன்ன பாரதி தில்…தில் தில் போன்ற வரிகளில் சற்றே புல்லரித்தாலும் நிற்காமல் ஓடுவது அவசியம். யாரோட உயர்வையும் யாராலையும்… விஷ்க் விஷ்க் விஷ்க் விஷ்க்… தடுக்க முடியாதுடா !! போன்ற விணாப் போன தத்துவ வரிகளின் போது அந்த படத்தில் சுறுசுறுப்பாய் நடனமாடும் விஜயையும், அவரை விட நன்றாக ஆடும் அந்த இடது பக்க குருப் டான்ஸரையும் நினைத்துக் கொண்டே ஓடினால், தத்துவ ஓவர்டோஸிலிருந்து தப்பலாம்.

    ஷங்கர் படம் போல சில பாடல்களுக்கு சீஸனாலிடி உண்டு. இரண்டு வாரங்களுக்கு முன் நன்றாயிருந்த பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவாவையும், ஆள்தோட்ட பூபதியையும், இப்போது கேட்டால் போரடிக்கிறது. அதனால் ஒரு 30-40 பாடல்கள், mp3 பிளேயரில் ஸ்டோர் செய்வது உடல் நலத்திற்கு நல்லது.

    அவ்வப்போது டிரட்மில்லில் அடிக்கடி ஓடும் பாட்டுக்களை இந்த எம்பாட்டில் போடுகிறேன். இப்போதைக்கு பதிற்றுப் பத்து –

    1) நீ முத்தம் ஒன்று கொடுத்தால்[ரேடியோ ரீமிக்ஸ்] – போக்கிரி
    2) மேகம் கொட்டட்டும்[ரீமிக்ஸ்] – எனக்குள் ஒருவன்
    3) வாடா வாடா தோழா – சிவகாசி
    4) உயிரின் உயிரே – காக்க காக்க
    5) ஒரு நாளில் வாழ்க்கை[ரீமிக்ஸ்] – புதுப்பேட்டை
    6) வெற்றிப் படி கட்டு – படையப்பா
    7) மின்சாரம் என் மீது – ரன்
    8) கொடுவா மீசை அறுவா பார்வை – தூள்
    9) அர்சுனரு வில்லு – கில்லி
    10) காதல் வளர்த்தேன்(காட்டுத்தனமான ஒரு DJ edit) – மன்மதன்

  • March 15, 2007

    சியாட்டல் !!

    நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
    நானும் மெழுகுவர்த்தியும் !!

  • February 18, 2007

    பார்வை 360 – சுஜாதா

    குமுதத்தில் இந்த வாரம் முதல் சுஜாதா எழுதும் ஒரு 360 டிகிரி தொடர். ஆரம்பதிலேயே தனது புத்தகங்களிலிருந்து தமிழ் சினிமாவாக மாறியவற்றை கலாய்கிறார்.

    1965 என்று ஞாபகம். ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை வெளிவந்தபோது, வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறையக் கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தச் சிறு குறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.

    அன்று எஸ்.ஏ.பி. அந்தக் குறிப்பை அனுப்பியிராவிட்டால், இன்று இந்தக் கட்டுரைவரை வந்திருக்கமாட்டேன்.

    சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம்.

  • February 13, 2007

    முத்தம் தின்பவள்

    guru mutham thinbaval.jpg

    நான் முத்தம் தின்பவள்
    ஒரு முரட்டுப் பூ இவள்
    தினம் ஆடை சந்தையிலே
    முதலில் தோற்பவள்

    இரு குறையட்டும் திரு விளக்கு
    நீ இடஞ்சுட்டி பொருள் விளக்கு
    அட!! கடவுளை அடையும் வழிகள்
    என் மேல் எழுதிருக்கு

    மய்யா மய்யா
    நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள்
    மய்யா மய்யா
    என் உடம்பினில் ஒளிவிட்ட மலர்களும்
    பொய்யா பொய்யா…

    அயிட்டம் நம்பரிலும் ஒரு subtle இலக்கிய சாதனை. அட போட வைத்தவர்கள் வைரமுத்து, ரஹ்மான் மற்றும் சின்மயி.

←Previous Page
1 … 86 87 88 89 90 … 319
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog

Loading Comments...

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar