Skip to content

kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • gurukirthigavasan.com
  • December 31, 2006

    இரண்டு கட்டுரைகள்

    சமீபத்தில் படித்த கட்டுரைகளில் இரண்டு பிடித்தன.

    ஒன்று.

    ரோபாடிக்ஸ் பற்றி சயண்டிபிக் அமெரிக்கனில், பில் கேட்ஸ் எழுதிய, A Robot in Every Home. இருக்கிற எல்லா டெக்னாலஜியும் ரொம்ப முன்னேற்றி ஓசைப்படாமல் ரோபாடிக்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் மைக்ரோசாப்ட்காரர்கள். கேட்ஸின் இந்த கட்டுரை, ரோபாடிக்ஸ் பற்றி சாமனியனுக்கு ஒரு curtain raiser.

    கேட்ஸ் சொல்ல வருகிற விஷயம் சுவாரசியமானது தான். இதுதான். தற்போது உலகில் உள்ள அனைத்து ரோபோ தயாரிப்பாளர்களும், அவர்களுக்கு தேவையான மென்பொருளை அமைத்துக் கொள்கிறார்கள். இன்றுல்லபடி ஒரு இரண்டடி ரோபோ மூன்று இஞ்ச் கையசைக்க, சியிலோ, சி++யிலோ, மெஷின் லாங்வேஜிலோ லைப்ரரி பங்ஷன்களை எழுதி, டாட்டா பைபை சொல்லித் தருகிறார்கள். ஒரு ஜப்பான் கம்பெனி தயாரிக்கும் ரோபோ மென்பொருள் மற்றோர் கம்பெனியால் ரோபோவில் உபயோகிக்க inter-operableஆக இல்லை. இதனால், ஆளாளுக்கு தனி மென்பொருள் தயாரிக்க, ஒவ்வோர் ரோபோவும் மற்றோர் ரோபோவிலிருந்து ஏராளமாய் வேறுபடுகின்றன.

    மைக்ரோசாப்ட், இந்த சைன்ஸ் பிக்க்ஷன் ரோபோ உலகில் ஏராளமாய் பணங்கொட்டி, Microsoft Robotics Studio மென்பொருளை எழுதியிருக்கிறார்கள். இப்போதைக்கு இது ஒரு இலவச சேவை தான். ஆனால் மைக்ரோசாப்டின் ஆர்வத்தை பார்த்தால், இன்னும் 5-6 ஆண்டுகளில், இந்த மார்க்கெட் பன்மடங்கு வளரலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த அறிமுகம், ரோபாடிக்ஸ் மார்க்கெட்டின் Tipping Point ஆகக்கூடும். அப்போது கேட்ஸின் இந்த கட்டுரை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

    அடுத்த பத்து வருடங்களில் உங்களுக்கு அமிர்தாஞ்சன் தேய்த்து விடவோ, பொன்னியின் செல்வன் படித்து நடித்துக் காட்டவோ, வேளாவேலைக்கு இன்சுலின் ஊசி போடவோ, கூட உட்கார்ந்து கண் கசக்கி ‘செல்வி’ பார்க்கவோ, ஒரு அசமஞ்ச ரோபோ வீட்டோடு வரக்கூடும். அதற்கு முன் ஷங்கரும் சுஜாதாவும், கமலை வைத்து ‘ரோபோ’ எடுப்பது நலம்.

    இரண்டு.

    இதிலும் கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்கிறார். பீட்டர் சிங்கரின், What Should a Billionaire Give – and What Should You?, என்னும் நியுயார்க் டைம்ஸ் கட்டுரை, சற்றே நீளமாயிருந்தாலும், சிந்திக்க தூண்டுகிறது. கிறித்துமஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த இக்கட்டுரையில், வாழ்வின் விலை பற்றி ஆரம்பித்தாலும், அதை தாண்டி நமது நம்பிக்கைகளை அசைத்து பார்க்க முயற்சி செய்கிறார், பீட்டர் சிங்கர் என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.

    அமெரிக்காவின் நான்கு பெரிய கொடை கர்ணன்களாகிய ஆண்ட்ரியு கார்னகி, ஜெ டி ராக்ப்பி்ல்லர், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் ஆகியவர்களில் கார்னகி தவிர மற்ற மூவர் நாத்திகர்கள். இவர்களை கொடுக்க வைத்தது, வளர்ப்பு முறையா ? நம்பிக்கைகளா ? தன்னை இறந்த பின்னும், இவ்வுலகம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்று கோவில்கள் கட்டும் பேரரசர்கள் போன்ற எண்ணமா ? உலகை மாற்றும் முயற்சியா ? அல்லது வெறும் egoவா ?. எது ?

  • December 27, 2006

    எம்.எஸ் – வாழ்வே சங்கீதம்

    எம் எஸ்

    ஆனந்த விகடனில் மார்கழி சீசன் எழுதும் வீயெஸ்வியை பற்றியும் அவரின் இசை புலமையை பற்றியும், அவரின் சுவாரசியமான கட்டுரைகளை படித்தவர்களுக்கு தெரியும். எம்.எஸ்சை பற்றிய தமிழ் புத்தகம், அதுவும் வீயெஸ்வி எழுதியது என்றவுடன் படிக்கத் தோன்றியது.

    மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற குஞ்சம்மா என்கிற எம்.எஸ்சின் இசை/இல்லற வாழ்வை பற்றிய ஒரு எளிய அறிமுகம் தான், கிழக்கு பதிப்பகத்தின் எம்.எஸ் – வாழ்வே சங்கீதம். எம்.எஸ் போன்ற ஒரு இசை அரசியின் வாழ்வை 141 பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியாது என்று நன்கு அறிந்து தான், அவர் வாழ்வின் மிக முக்கிய சம்பவங்களை இந்நூல் பட்டியலிடுகிறது.

    எம்.எஸ் ஒரு child prodigyயாக அறியப்பட்டதிலிருந்து துவங்கி ‘ஹரி தும் ஹரோ’ பாடலை காந்தி நேயர் விருப்பமாய் கேட்டது, தன் பட்டமான Nightingale of Indiaவை சரோஜினி நாயுடு எம்.எஸ்சுக்கு கொடுத்தது, மீரா திரைப்படத்தை First Day First Show பார்க்க மனைவி எட்வினாவுடன் லார்ட் மவுண்ட் பாட்டன் வந்தது, ‘நான் இப்போ வீணை கத்துக்கிட்டேன். அடுத்த தடவை மெட்ராஸ் வரும் போது உங்க வீட்டுக்கு வந்து உங்களுக்கு எந்தரோ மகானுபாவுலு வாசித்து காட்ட ஆசை’ என்று அப்துல் கலாம் சொன்னது, ஜோதிகாவின் ஆர்.எம்.கே.வி புடவை போல ‘எம்.எஸ் புளு’ புடவை பிரபலமாகியது என்று ஏகப்பட்ட ‘அட’ சொல்ல வைக்கும் நிகழ்ச்சிகள்.

    இவை எல்லாவற்றிக்கும் மேலாக எம்.எஸ் வாங்கிய விருதுகள், தன் இசை வாழ்வின் நடுவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் கல்கி கார்டன்ஸ் பங்களாவை விற்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு சிறு வாடகை வீட்டுக்கு ஜாகை போக வேண்டிய கட்டாயம் என்று ஒரு roller coaster வாழ்கையின் sneak peak தான் இந்த புத்தகம். புத்தகத்தை சுவாரசியமாக்க ஆங்காங்கே சற்று அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்டதோ என்று நினைக்க வைத்தாலும், எம்.எஸ்சை பற்றி அதிகம் தெரியாமல் அதை சொல்ல முடியாதென்பதும் உண்மை. பின்னிணைப்பாக, இந்த புத்தகம் எழுத உதவிய நூல்களை பட்டியலிட்டிருப்பதற்கு வீயெஸ்வி மற்றும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி.

    எம்.எஸ்சும் இசையும் ஒன்று தான் என்றாலும் தன் இசை மூலம் இதுவரை அவர் தர்மமாக வழங்கியது மூன்று கோடி என்று படித்தால் அசராமல் போவீர்களா ? அறுபது ரூபாயும், மூன்று மணி நேரமும் இருந்தால் கபி அல்வித நா கேஹனா பார்ப்பதை விடுத்து தமிழன் படிக்க வேண்டிய கட்டாய புத்தகம்.

  • December 21, 2006

    ஹி..ஹி !!

    குரு மணி ரத்னம் ஐஸ்வர்யா

  • December 18, 2006

    பீப்பிங் டாம்

    ஜோடி no. 1

    மயிலாப்பூர் முண்டகன்னி அம்மன் கோயில் தெருவில் இன்னும் அப்பார்ட்மெண்டாக மாற்றாமல் உள்ள ஓரிரு புராதன வீடுகளில் நண்பன் ஸ்ரீதரின் வீடும் ஓன்று. போன வாரம் போன் செய்த போது, ஸ்ரீதரின் பாட்டி எடுத்தார். அங்கு இரைச்சலாக இருந்ததால் கொஞ்சம் சத்தமாக பேசினேன்.

    “பாட்டி, சவுக்கியமா. ஸ்ரீதர் இருக்கானா ?”.
    “ம்…….ஸ்ரீதர் கொத்தவரங்கா வாங்க டாங்க் வரைக்கும் போயிருக்கான். தோ வந்துருவான்”.
    “ஓ..ஒகே. நோ ப்ராப்ளம். நீங்க எப்…”
    விசாரிக்க போன என்னை குறுக்கிட்டு “சத்த நாழி கழிச்சு போன் பண்ணுடா. ஆமான்..நீ ஜோடி no. 1 பாக்கலியா. நல்ல கட்டம் இப்போ”. பதில் எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டார்.

    ஜோடி no. 1ஆ ? என்று கொஞ்சம் தலை சொறிந்தேன். அடுத்த நாள் சியாட்டலில் அடித்த புயலில், நகரமே இருட்டில் மூழ்க, ஜோடி no. 1 மறந்து போனது. சாப்பிட சாதமும், குளிக்க வெந்நீரும் இல்லாமல், அந்த கடுங் குளிரில் மூன்று வேளையும் ஹோல் வீட் பிரட்டும், க்ரேப் ஜெல்லியும் மட்டுமே மிஞ்சியது. பக்கத்து நகரத்தில் கரண்ட் இருந்த நண்பர் ஒருவர் போன் செய்து வீட்டுக்கழைக்க, அவர் போனை கீழே வைக்கும் முன்பு, குடும்பத்துடன் ஆஜரானேன்.

    The Devil Wears Prada, செம கடியாக இருந்ததால் நண்பர் டீவியை திருப்ப விஜயில் ஜோடி no. 1 என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. ஸ்ரீதரின் பாட்டி சொன்ன “…நல்ல கட்டம் இப்போ”, ஞாபகம் வந்தது.

    ஜோடி no. 1ல் சின்னத்திரை மெகா சீரியல் நடிகமணிகள், நடனமணிகளாகி குத்தாட்டம் போடுகிறார்கள். தமிழ் நாடு குலுங்குகிறது. அழுமூஞ்சி மனைவிகளாகவும், மாற்றான் மனை நோக்கும் கணவன்களாகவும், கோபத் தம்பிகளாகவும், கோள் சொல்லும் அத்தைகளாகவும் சின்ன திரையை ஆக்கிரமித்தவர்கள், வடுமாங்கா ஊருதுங்கோ என்றாட கூட்டம் ஆலாய் பறக்கிறது. அதை தவிர, போட்டியில் பங்கேற்பவர்களின் பேட்டியும், behind the sceneசும் ஒரு தனி ஏபிசோடாகிறது. இந்த behind the scenes ஏபிசோடில் சின்னத்திரை பிரபலங்கள் மச்சான் மச்சான் என்று கிண்டலடித்துக் கொள்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் போல மிமிக்ரி செய்து வயிறு வலிக்க சிரிக்கிறார்கள். போட்டியை விடவும் அதை தாண்டிய இந்த மாதிரி விஷயங்களில் தான் வெற்றி ஒளிந்திருக்கிறது.

    விஜய் டீவி இது போல competition ஷோக்களை ஹிட்டாக்குவதில் பேர் போனவர்கள். ஸ்டார் டீவி உபயத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு தரம் உயருகிறது. ஒரு போட்டியையும் ஆங்காங்கே கொஞ்சம் reality டீவி கான்செப்டையும் ஊருகாயாய் சேர்த்தால், ஒரு ஹிட் போட்டி ரெடி. ரியாலிட்டி டீவி கான்செப்ட் எல்லா நாடுகளிலும் மிக மிக பிரபலம். அமெரிக்கன் அய்டலும், இண்டியன் அய்டலும், விஜய் சூப்பர் சிங்கரும், ஜோடி no. 1ம் இந்த மாதிரி ஒரு அரைகுறை ரியாலிட்டி டீவி தான். கூர்ந்து கவனித்தால் மேலும் புரியும்.

    ரியாலிட்டி டீவியின் வெற்றிக்கு காரணம் மக்களின் ஒருவித வாயரிசம் தான். அந்த பிரபலங்கள் தங்களுடைய தின வாழ்கையில் எப்படி நடக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று அறியும் ஆர்வம். எல்லோர்க்குள்ளும் ஒரு பீப்பிங் டாம் ஒளிந்திருப்பதால் தான், எத்திராஜில் படிக்கும் ரம்யாவிலிருந்து, முண்டகன்னி அம்மன் கோயில் தெரு் எச்சுமி பாட்டி வரை, ஜோடி போட்டி கட்டிப்போடு்கிறது. இந்த பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கும் வாயரிச சந்தோஷம், மனிதனின் ஆதார குணங்களில் ஓன்று. லஞ்சம் போல. எந்த இந்திய தாத்தா வந்தாலும் அழிக்க முடியாது. வாயரிச கணங்களை குறைக்கலாம். அழிப்பதரிது.

    ஏக ஹிட்டானதால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அடுத்து எந்த சூப்பர் ஷோ பண்ணலாம் என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் டீ டைமிலும், கறிகாய் மார்கெட்டிலும், ஆதிராஜ்-ரக்ஷனாவா / ராகவ்-ப்ரித்தாவா என்று அலசுகிறார்கள். நாட்கள் கழிகின்றன.

  • December 3, 2006

    தீபாவளி, தலைவலி

    இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவின் மேல் உள்ள நம்பிக்கைகள் மேலும் குறைந்தன. இத்தனைக்கும் பார்த்தது இரண்டே தீபாவளி ரிலீஸ்கள் தான். வரலாறு – வல்லவன். தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பத்து பார்முலாக்கலில், இவை இரண்டும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும். காதலுக்காக வேஷம் போடும் காதலனும், பிறந்ததும் தன்னை பிரிந்த தந்தையை தேடிச் செல்லும் ஒரு பிள்ளையும் தமிழ் சினிமாவின் ஆதி காலத்து வரவுகள்.

    vallavan

    வல்லவன் பார்த்துவிட்டு திரும்பும்போது பிடித்த தலைவலி விட ரெண்டு நாளாகியது. கதையல்ல நிஜம். சிம்பு தெனாவட்டாக பேசினாலும், விஷயம் இருக்கும் என்று நம்பினால், ஏமாற்றுகிறார். இப்போது ரஜினியை விட விஜய்யை க்லோசாக காப்பியடிக்கிறார். தனுஷை பார்த்து punch dialogueல் புகை விடுகிறார். நயன்தாரவை தாறுமாறாக கட்டி பிடித்து கடித்து கதை ஓட்டப்படுகிறது. சிம்புவின் பிடியிலிருந்து, படம் தோற்றவுடன் நயன்தாரா எஸ்கேப்.

    கல்யாணராமன் பல் வைத்ததால் தன் நண்பர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்று கதை எழுதும் இந்த காலேஜ் மாணவனின் படம் பார்க்க செல்லும் மற்ற காலேஜ் மாணவர்களை கடத்துதல் நலம். சந்தானம் அவ்வப்போது லொல்லு சபா ஞாபகத்தில் சிம்புவை செமயாய் கலாய்க்கிறார். ரீமா சென், ஒரு வாரம் தொடர்ந்து படையப்பாவை பார்த்தது அவர் கண்ணில் வீக்கமும் நீலாம்பரியுமாய் தெரிகிறது. யுவன் ஓ, ஆண்டனி ஓஹோ, சிம்பு ம்ஹும்.

    நந்தனம் YMCAவிலும், சென்னை / கோவை இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் சினிமா ஷுட்டிங் எடுப்பதை தவிர்க உடனடி சட்டம் வேண்டும். எந்த சினிமா போனாலும், சியாட்டலில் கூட, மச்சான் இது என் காலேஜ் என்று கத்துகிறார்கள்.

    Godfather

    வரலாறான காட்பாதருக்கு ஏகப்பட்ட வரலாறு. இந்த படம் சம்பந்தப்பட்ட யாரோ இது நாயகனுடன் வந்திருக்க வேண்டிய படம் என்று சொன்னதாக ஒரு ‘டாக்’ வேறு. பார்த்தால் தான் தெரிகிறது, இது எழுபது எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய படமென்று. அங்காங்கே AVM தெரிகிறது. ஒரு பெரிய பங்களாவில் யுனிப்பார்ம் போட்ட வேலைகாரர்கள், எப்போதும் எதையாவது துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமோஷனல் ஸீக்வன்ஸில், முதலாளிக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று தெரியாமல் ஒன்றாய் சேர்ந்து கிசுகிசுக்கிறார்கள். எனக்கு தெரிந்து கடைசியாய் இப்படி வந்த படம், பேர் சொல்லும் பிள்ளை. பணக்கார அஜித், காலை எழுந்து பல் தேய்த்து குளித்து, டைனிங் டேபிளில் இருக்கும் சூடான இட்லி சாப்பிட மறுத்து, மாடிப்படி இறங்கும் போது, வேலைக்காரர்களுக்கு குட் மார்னிங் சொல்லிக் கொண்டே, பெண்கள் கல்லூரிக்கு பாட்டுப்பாட நண்பர்களுடன் ஏசி காரில் செல்கிறார். இதற்கு மேல் கதையில் சற்றே பைத்தியமான ஒரு அன்புள்ள அம்மா வேறு. தமிழ் சினிமாவின் வரலாறு சொல்லும் வரலாற்று படமிது.

    அஜித்திற்கு இன்னும் டையலாக் டெலிவரி வர நாளாகும் போலிருக்கிறது. படத்தின் மூன்றில் மூன்று பாதியிலும் மூன்று வேடங்களில் ஆக்கிரமிக்கும் அஜித், மூன்றிலும் கோட்டைவிட்டது அவரின் காரியருக்கு அசம்பாவிதமே. காண்டாக்ட் லென்ஸ் வைத்துத் தான் இரட்டை வேட அஜித்தில் எந்த அஜித் யார் என்று அடையாளம் தெரிகிறது. ரஹ்மான் சில படங்களை நண்பர்களுக்காக செய்கிறேன் என்று ஒரு முறை சொன்னது இந்த படத்தில் புரிகிறது. நண்பர் யார் என்று தான் தெரியவில்லை.

    கல்யாணத்துக்கு வந்த கூட்டம், கிளைமாக்ஸ் சண்டையை பார்க்க வரிசையாய் ரவுண்டு கட்டி நிற்கிறார்கள். யூ டூ ரவிகுமார் ?

←Previous Page
1 … 93 94 95 96 97 … 322
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • gurukirthigavasan.com
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 28 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar