kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • February 25, 2008

    Stop Smoking !!

    First things first… I have just smoked my last cigarette before sending this post. YES I HAVE FINALLY KICKED THE BAD HABIT!!! I know I know, I can already hear all of y’all scream and shout. I was supposed to give up on 31st. But I didn’t (which is one of the reasons I was avoiding posting). I tried my best… but I”m sorry I couldn’t then… but I have now… so please don’t give me grief… instead support me now.

    Second step: get back to sleeping early.

    Third: Work out religiously.

    4th: Get back on my healthy diet.

    5th: Just stick to the above 4 for a while before taking the 5th step.

    Stop Smoking, follow Aamir Khan and if possible, his blog.

    P.S – Previously, Stop Smoking Shahrukh.

    P.P.S – For the folks who think the above para was my experience. It isn’t about me stoping to smoke. It’s a quote/unquote from Aam’r blog. That was my mistake to make it as a subtle quote.

  • February 22, 2008

    தண்டர்போல்ட் கிட்

    இரண்டாவது உலகப்போருக்குப் பின் வந்த இருபது வருடத்தில், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் மட்டும் கிட்டத்தட 60 மில்லியன். இன்றைய அமெரிக்க ஜனத்தொகையில்(300 மி) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பாதி பிறந்தது அப்பொழுது தான். 1946 – 1964 வரை அமெரிக்காவில் பிறந்த அந்த தலைமுறையை பேபி பூமர் ஜெனரேஷன்(Baby Boomer generation) என்கிறார்கள். 1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட Birth Control Pillsகளினால் தான் இந்த பேபி பூமர் ஜெனரேஷன் முடிவுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த பில் கிளிண்டனும், தற்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் கூட பேபி பூமர் தலைமுறையில் பிறந்தவர்கள் தான்.

    இந்த பேபி பூமர் தலைமுறையில், போன அமெரிக்க நூற்றாண்டின் பாதியில், 1951ல், பிறந்த பில் ப்ரைசன் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்புகள் தான், The Life and Time of a Thunderbolt Kid. அப்படித் தான் ஆரம்பித்தாலும், கிட்டத்தட்ட அமெரிக்கா வல்லரசாக வளர்ந்த அந்த முக்கிய இருபது வருடங்களின் ஒருவித வரலாறாகத்தான் இதைப் படிக்க முடிகிறது.

    பில் பிரைசன் ஒரு பயணக் கட்டுரையாளர். A Walk in the Woods என்ற அவரின் அமெரிக்க பயணக் கட்டுரை மிகப் பிரபலம். வெறும் பயணத்தைப் பற்றி மட்டுமல்லாமல், அதன் மூலம் ஓர் இடத்தில் வாழும் மக்களின் கலாசாரம், வாழ்க்கை நிலை என்று பலவற்றையும் கூர்ந்து நோக்கும் திறன் கொண்டவர். இதற்கு மேல் சிறந்த நகைச்சுவையாசிரியர். 2004ன்கில் இவர் எழுதிய A Short History of Nearly Everything , இந்தியாவில் கன்னாபின்னாவென்று விற்றது.

    தண்டர்போல்ட் கிட்டில் அயோவா மாகாணத்தின் டி மாய்ன்(Des Moines) நகரத்தில் கழித்த தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி காமெடியாக விளாவரியாக எழுதுகிறார். எல்லோர் வீட்டிலும் கார்கள் இருந்ததில்லை. 1945 வருடத்திற்கு எழுபதாயிரம் கார்கள் விற்ற அமெரிக்காவில், 1950களின் நடுவே, ஒரு வருடத்திற்கு விற்ற கார்களின் எண்ணிக்கை 4..5 மில்லியன்கள். இப்போதிருக்கும் 64,000 மைல் ஹைவேக்களை, ஹைசன்யோவர் ஜனாதிபதியாய் இருந்த, 50களில் கட்டினார்கள்.

    அப்போது தான் ஃபிரிட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவர் வீட்டில் ப்ரிட்ஜ் வாங்கினால், ஒரு ஆறு மாதத்திற்கு யாராவது அந்த பிரிட்ஜைப் பார்க்க வந்து கொண்டிருப்பார்கள்.அதைப் பற்றி வீட்டின் தலைவர் ஒரு மணி நேரமாவது பீத்திக் கொள்வார். டிவி ஒளிபரப்புகள் துவங்கின. இன்னமும் கலர் டிவி வந்தபாடில்லை. ஒரே டிவிச் சானலை ஒரு நாடே பார்த்துக் கொண்டிருந்தது. ரொம்பவும் சாய்ஸ்கள் இல்லாமல் மக்கள் சாவகாசமாக, சந்தோஷமாக இருந்தார்கள். பில் பரைசனின் detailingல் கில்லாடி. தண்டர்போல்ட் கிட் என்னும் ஒரு காமிக் ஹிரோவாக தன்னைக் கற்பனைச் செய்து கொண்ட கதை தான் இந்த புத்தகத்தின் ஹைலைட்.

    இதை படித்தவுடன், 1950களின் அமெரிக்காவும், 1970களின் இந்தியாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்று தோன்றுகிறது. இதே அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கும்.

    தான் எழுதும் விஷயத்தில் பெரிதாக ஒன்றும் இல்லாத போது, தனது விவரிப்பு வார்த்தைகளால் விஷயத்தை நகைச்சுவையாக்குகிறார். பஸ்ஸில் படித்துக் கொண்டே வாய்விட்டு சிரித்தேன். பக்கத்தில் இருந்தவர் புத்தகத்தின் அட்டையை மீண்டும் பார்த்துக் கொண்டார்.

    அமெரிக்கா எப்படி அமெரிக்காவானது என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால், சீரியஸ் கட்டுரைப் புத்தகங்களை விடுத்து, இதைப் படித்துப் பார்க்கலாம். கடந்த இரண்டு வருடங்களில் நான் படித்த புத்தகங்களில் சிறந்த புத்தகம் என்று சொல்ல முடியும். யாருக்காவது புத்தகம் பரிசளிப்பதாய் இருந்தால், தற்போது இதைத் தான் வாங்கிக் கொடுப்பதாய் எண்ணம். குழந்தைப் பருவத்தை தாண்டிய யாரும் ரசிப்பார்கள்.

  • February 21, 2008

    Repeatu

    I have gone crazy in the past few weeks. As nidhi, mentions it, writers love movies. That includes a short story writer who are small timers like me. Well, i’ve completed the sequel to my orginal short story named the duplicate dream. I am the only writer probably who would have written a sequel to a short story. My ideas of making this a trilogy is at the back of my mind. I wish I could meet David Davidar to publish this short story. Currently, I need to WATCH MOVIES. 😦 But here i am in my office cublicle on a monday morning preparing for a technology presentaion scheduled this afternoon. Well, who said software engineers don’t day dream.

    I have actually been off from writing blogs for 2 full weeks. I miss them a lot. Quite a lot to write of the past week’s experiences. I swear by the moon and the stars to write a lot on my blog. Hope i do !!

    I wrote that blogpost on April 22, 2002.

    I only wish, I can get back to my early blogging days. Raw, naive and unfettered.

    I wrote that blogpost on July 30, 2005.

    Its 2008 now, nearly six years after that 2002 post was written. And today, I would love to write a blogpost just like April 2002(with all that spell/grammatical errors) but all I could do is only repeat what was written as of July 2005. You get it ?

  • February 21, 2008

    தொலைந்து போனவர்கள்

    lost_abc.jpg

    டிவி தொடர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தது இரண்டு தொடர்கள். இரண்டுக்கும் ஒரே பெயர். ஒன்று 80களின் முடிவில் DD 2 அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்தது. மற்றொன்று தற்போது வந்து கொண்டிருப்பது. தொலைந்து போனவர்கள் – Lost.

    சா.கந்தசாமியின் நாவலான தொலைந்து போனவர்கள், பதிமூன்று வாரங்களுக்கு, ஒவ்வொரு வியாழன் இரவும் பத்து மணிக்கு ஒளிபரப்பான போது, எனக்கு டினேஜ் வயது. அந்தத் தொடரில் தொலைந்து போனவர்களில் நானும் ஒருவன். அதற்கு சில வருடங்களுக்க்கு பிறகு, புத்தக சந்தையில் வாங்கி, கந்தசாமியின் நாவலைப் படித்தேன்.

    கிராமத்தில் பிள்ளைப் பிராயத்தை கழித்த நான்கு பேர், பல வருடங்களுக்கு பிறகு தன் பழைய வாழ்க்கைய நினைத்துப் பார்த்து, மீண்டும் தன் கிராமத்திலேயே சந்தித்துக் கொள்கிற மாதிரியான கொஞ்சம் நெகிழ்ச்சியான தொடர். நடிகர் ராஜேஷும் அவரின் நண்பர்களாக நடித்தவர்களும் இன்னமும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். என்னை ரொம்பவும் ஈர்த்த தொடர் வேறில்லை. லாஸ்டைத் தவிர.

    லாஸ்ட்டைப் பற்றி பேசும் முன், கொஞ்சம் பழைய புராணம். டானியல் டிஃபோ (Daniel Defoe) எழுதிய ஆங்கிலத்தின் முதல் நாவலான(1719) Robinson Crusoe படித்திருக்கிறீர்களா ? அதே டினேஜில் ராபின்ஸன் க்ருஸோவை நாவலாக/காமிக்ஸ்ஸாக படித்தேன். பிறகு கிட்டத்தட்ட ஒரு ஐம்பது முறைப் படித்த பின்னும், பிடித்திருந்தது. எப்போதெல்லாம் பாட்டி எனக்கு பிடிக்காத அடையோ, அரிசி உப்புமாவோ செய்கிறாளோ, அப்போதெல்லாம் ராபின்சன் க்ருஸோவைப் படித்தேன். அதில் வரும் க்ருஸோவும் ஃப்ரைடேவும் என்னுடன் ரொம்பவும் நண்பர்களாகிவிட்டார்கள்.

    தனியாளாக ஒரு தீவில் வந்து மாட்டிக்கொள்ளும் க்ருஸோ என்றவனைப் பற்றித் தான் கதை. க்ருஸோ அந்த தீவில் அலைந்து திரிந்து தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அந்தத் தீவில், சில பழங்குடி மக்கள் அடிக்கடி வந்து அங்கிருக்கும் கைதிகளை நரபலி கொடுத்து உண்கிறார்கள். அங்கே தான் ஃப்ரைடே என்ற ஆப்ரிக்க இளைஞனை காப்பாற்றுகிறான். இருவரும் சேர்ந்து ஒரு குகையை வாழக்கூடிய வீடாக மாற்றிகிறார்கள். அதைப் படிக்கும் போதெல்லாம் நமக்கும் அப்படி எதாவது நடந்து, ஒரு தீவில் தனியாளாக மாட்டோமா என்று நினைத்துண்டு. இதே மாதிரி ஒரு castaway கதையை மாடர்னாக மாற்றினால் எப்படி இருக்கும். லாஸ்டைப் போல.

    சிட்னியில் இருந்து லாஸ் எஞ்சல்ஸ் செல்லும் ஓஷியானிக் ஃப்ளைட் 815, திடிரென்று கிழே விழுகிறது. அது உடைந்து விழுந்த இடம், ஒரு தீவு. அந்த ப்ளைட்டில் பயணித்தவர்களில் சிலர் உயிர் பிழைக்கிறார்கள். தங்களைக் காப்பாற்ற, உதவி வரும் என்று காத்திருக்கிறார்கள். வரவில்லை என்றவுடன், உதவி வரும் வரை அந்தத் தீவில் வாழ முயல்கிறார்கள்.

    முதலில் அந்தத் தீவில் தங்களைத் தவிர மற்ற யாரும் இல்லை என்று நினைத்தவர்கள், தங்கள் கூட்டத்தில், ஒவ்வொருவராக மறையும் மர்மத்தைக் கண்டு பிடிக்கப்போய் யாரிடமோ மாட்டிக் கொள்கிறார்கள்.

    தன் மணவாழ்க்கையைத் தொலைத்த ஜாக் என்கிற ஒரு அதி நுட்ப சர்ஜனும், தன் தந்தையை கொலை செய்த கைதியாக இருக்கும் கேட் என்ற ஒரு பெண்ணும், லாட்டரியில் மில்லியன் டாலர்கள் விழுந்தும் துரதிர்ஷ்டவசமான ஹர்லி என்ற ஒரு ஆஜானுபாகுவான ஸ்பானிஷ் இளைஞனும், ஒரு அமெரிக்க-இரானிய போலிஸ்காரனும், காலொடிந்த ஜான் லாக் என்கிற கிழ இளைஞரும் என்று ஏகப்பட்ட பாத்திரங்கள். ஒவ்வொடு வாழ்க்கையும் ஒவ்வொரு கிளைக்கதை.

    என்ன தான் தொலைந்து போனவர்களை பற்றியதாக கதைக்களன் இருந்தாலும், அந்த விமான விபத்தில் பிழைத்த அத்தனைப் பேரும், வாழ்வைத் தொலைத்தவர்கள். அந்தத் தீவில் தன் தொலைத்த வாழ்வை கண்டுபிடிக்கிறார்கள்.

    ஸ்டீபன் கிங் நாவல் போல, முன்னேயும் பின்னேயும் செல்லும் ஒரு பெண்டுலம் கதை. அதிரடி திருப்பங்களுடன் இப்போது வருவது லாஸ்டின் நான்காவது வருடம். ஒவ்வொரு வருடமும் 24 நாற்பது நிமிட எபிசோடுகள் என்று இது வரை அடுத்ததை யூகிக்க முடியாமல் பயணிக்கும் அதிவேகத் தொடர்.

    இதைத் தவிர, அழகான ஹவாய் தீவு லொகேஷன்கள், மிக தெளிவான திரைக்கதை, எமாற்றாத எபிசோடுகள், நடிக்கத் தெரிந்த நடிகர்கள் என்று ரொம்பவும் க்ரிப்பிங்காக செல்லும் லாஸ்டை மிஸ் செய்ய முடியாது.

    இதுவரைப் பார்த்திராவிட்டால், abc.comல் லாஸ்ட்டின் எல்லா சீஸன் எபிசோட்களையும் போட்டு வைத்திருக்கிறார்கள், பார்த்து விடுங்கள். ஜென்ம சாபல்யம்.

  • February 20, 2008

    குமுதத்தில் ஞாநி

    gnani o pakkangal

    குமுதம் தவிர மற்ற இதழ்கள் தீம்தரிகிட இதழில் வரும் கட்டுரைகளை பயன்படுத்தலாம் என்று specificகாக ஃபைன் பிரிண்ட் போடும் அளவுக்கு, குமுதத்துக்கு எதிராக இருந்த எழுத்தாளர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுகிறார், என்றவுடன் விஷயமிருக்கும் என்று நினைத்தேன். இருக்கிறது.

    ஓ பக்கங்களுக்கு முன்னமே அவர் எழுதி, சொல்ப பிரதிகளே விற்ற தீம்தரிகிடவின் வாசகன் என்ற அளவில் எனக்கு ஞாநியின் நேர்மையான கருத்துக்கள் பிடிக்கும். சிலதில் ஒற்றுப்போக முடியாவிட்டாலும்(எம்.எஸ் அஞ்சலிக் கட்டுரை – தீம்தரிகிட) அவர் சொல்ல வந்ததை மறைக்காமல் சொல்லும் விஷயம், தமிழ்நாட்டுக்கு, அதன் பத்திரிக்கைகளுக்கு அரிது தான்.

    தீம்தரிகிட இதழை நடத்தி கொஞ்சம் நஷ்டம் அடைந்தார் என்று அதை படித்தவர்களுக்கு புரியும். பழுப்பு நிறத்தில், கெட்டி அட்டை இல்லாத ஒரு பேப்பர் கட்டை ஸ்டேப்லர் செய்து கொடுப்பது போல இருந்தாலும், ஞாநியின் முகத்திலடிக்கும் நேர்மை பிடிக்காமல் இருந்தால் அரிது.

    ஆர்குட்டில் ஒரு குழு உண்டாக்கும் அளவுக்கு ஓ பக்கங்கள் பிரபலமான போது, விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள் சில, outright boring. பலவற்றில் எதாவது எழுத வேண்டிய கட்டாயத்தில் எழுத வேண்டியது தெரிந்தது. தமிழக முதல்வரைப் பற்றிய கட்டுரை கூட சற்றே உண்மையின் விளிம்பில் இருப்பதாக் தோன்றினாலும், கொஞ்சம் அவசரமாக யோசிக்காமல் எழுதியதோ என்று தோன்றியது.

    ஓ பக்கங்களை, குமுதத்தில் இனி தொடரப்போகிறார். படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

    முதல் வார தொடரிலிருந்து –

    இனி ஆங்கில நிருபர் வேலை வேண்டாமென்றும் முழு நேர தமிழ் எழுத்தாளனாவதென்றும் முடிவு செய்தேன். அப்போது புதிய பத்திரிகையான ஜூனியர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன். என் வேலை நீக்கத்துக்கு எதிராக எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தபோது அன்றைய குமுதம் உதவி ஆசிரியர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன், ‘நான் குமுதத்துக்கு கடிதம்தான் எழுதினேனே தவிர, கட்டுரை எதுவும் எழுதவில்லை’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒரு சாட்சிக் கடிதம் கொடுத்தார். நான்கு வருடம் நடந்த வழக்கில் நான் ஜெயித்தேன்.

    அப்போது என் கருத்தை குமுதம் வெளியிட்டதால், என் எக்ஸ்பிரஸ் நிருபர் வேலை போயிற்று. இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன். கடைசியாக நான் ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய ‘ஓ’ பக்கக் கட்டுரை, கடைசி நிமிடத்தில் அச்சாகாமல் நிறுத்தப்பட்டது. காரணம் பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு விரோதமாக அது இருந்ததாம். அது மட்டுமா? நான் எழுதிய, எழுதுகிற, எழுதப் போகும் பல விஷயங்கள் அப்படித்தானே! எந்த செண்ட்டிமெண்ட்டுக்கும் விரோதமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல. பகுத்தறிவுக்கும் பொதுநலனுக்கும் விரோதமாக எது இருந்தாலும் அதை உரக்கச் சொல்வதே நம் பணி.

←Previous Page
1 … 59 60 61 62 63 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar