Month: March 2007
-
பச்சைத் தமிழனின் கலைந்த தலை
எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு. வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு…
-
முன் கதை சுருக்கம்
“ஏய்…எழுந்திரு” யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது. “இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ.” “யார்ப்பா அது ?” “என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு… அதெல்லாம் கிழவனுங்க வேலை…ம்… எழுது இதுல.” “இங்கிலீஷிலயா, தமிழிலியா…” லொட்டென்று தலையில் தட்டினார்கள். “பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட…
-
காபி வித் அனு
அனுஹாசன் வாயாடும் celebrity chat ஷோ. இதை காபி வித் கரண் என்று கரண் ஜோஹர், ஸ்டார் டீவியில் செய்த போது படா பேஜாராக இருந்தது. விஜய் டீவியில் முதலில் காவி வித் சுச்சி என்ற விளம்பரம் பார்த்த போது, யூகிசேதுவின் நையாண்டி தர்பார் போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நன்றாகவும் இருந்தது. சுசித்ரா, கொஞ்சம் செயற்கையாக, தமிழை கொஞ்சி கொஞ்சி சரோஜா தேவி போல பேசினாலும், மிர்ச்சி ரேடியோ கேட்டதால் பழக்கமாகி பிடித்துப்…
-
பின் கதைச் சுருக்கம்
தீவிரவாதம், முதலாளித்துவம், எல்லை, யுத்தம் என்றெல்லாம் பரபரப்பு கட்டுரைத் தொடர் எழுதும் பா. ராகவனின், எழுத்தாளர்கள் பற்றிய ஒரு அமைதிப் புத்தகம், பின் கதைச் சுருக்கம். கல்கியில் தொடராய் வந்து வரவேற்பு பெற்றதாக பின் கதைச் சுருக்கத்தின் முன்னுரை கூறுகிறது. 17 நாவலாசிரியர்கள். 17 நாவல்கள். ஒரு இணைக்கும் பாலம். அனுபவங்கள். இதிலுள்ள 17 நாவலாசிரியர்களையும் அவர்களின் ஒரு நாவல் பற்றிய சிறு குறிப்பும், அந்த நாவலுக்கு பின்னுள்ள சில ஆழ்ந்த அனுபவங்களுமே இதன் களம். இதிலுள்ள…
-
எம்பாட்டு ஜிம்பாட்டு !!
ஜிம், எக்ஸர்சைஸ் எல்லாம் வீணர்கள் செயல் என்று நினைத்த காலமெல்லாம் போய், நாளொரு டிரட்மில்லும் பொழுதொரு ஸ்டிரச்சுமாகி விட்டது. முதன்முதலில் டிரட்மில் செய்ய ஆரம்பித்த போது, ஒன்றும் புரியாத பால காண்டத்தில், டீல் காத்தாடி பிடிக்க தப தப என்று தலைதெறிக்க வெள்ளாளத் தெருவில் ஓடியது போல, டிரட்மில்லில் ஏறிய நொடியில் இருந்து ஓட ஆரம்பித்தேன். இரண்டு நிமிடத்தில் ஆக்ஸிஜன் போதாமல் மூச்சடைக்க, கால் அகட்டி நின்றுவிட்டேன். இப்படியாக பத்து நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல்…