Skip to content

kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • gurukirthigavasan.com
  • August 22, 2006

    எந்தரோ மஹானுபாவுலு !!

    போன வாரம் லேனா தமிழ்வாணன், தமிழ் சங்கம் சார்பில் சியாட்டல் வந்திருந்தார். இரண்டு வாரம் முன்பு யேசுதாஸின் கச்சேரியில், எள் போட்டு எண்ணை எடுத்தார்கள். இன்னும் இரண்டொரு வாரங்களில் எஸ்.பி.பியும் சரணும் தகரம் கூட தங்கம் தானே பாட வருகிறார்கள். சியாட்டலில் இது போல தமிழ் / தெலுங்கு / ஹிந்தி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் அம்முகிறது. காரணத்தை கார் ஒட்டிக் கொண்டே யோசித்துப் பார்த்தால் சற்றே புகை விலகுகிறது.

    நேற்று கோவிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு மூக்குப்பொடி மாமாக்கள், யேசுதாஸின் கச்சேரியை அலசி ஆராய்ந்தார்கள். காதை கொஞ்சம் அந்த பக்கம் சாய்த்தேன். அவர்கள் கொஞ்சம் கர்னாடகத்தை பற்றி பேசி விட்டு, சென்னை சபா கச்சேரிக்கும் சியாட்டல் கச்சேரிக்கும் ஆறு வித்தியாசம் போட போய் விட்டார்கள். அவர்களின் மருமகள்கள் கச்சேரிக்குப் போனதை ஏதோ சிவாஜி படத்தை பர்ஸ்ட் ஷோ பார்த்த மாதிரி பீலா விட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இப்படியாக இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒரு விதமான artificial expectation கிளம்புவதால், நம்மூர் பட்டு மாமி sistersகள் ஸ்ருதி பெட்டி தம்பூரா சகிதமாக க்ளீவ்லாண்டையும், அட்லாண்டாவையும், பச்சை டாலர்களையும் படை எடுக்கிறார்கள்.

    பல desiக்கள், மாதா மாதம் அம்மா அப்பாவுக்கு ஒரு 200 டாலரை money2indiaவில் அனுப்பிவிட்டு, இங்கிருந்தே சென்னை கனவு காண்கிறார்கள். தமக்கும் சென்னைக்குமான gapஐ குறைப்பதாக நினைத்துக் கொண்டு, கச்சேரியை முற்றுகையிட்டு, எல்லா பாட்டுக்கும் ஆதி தாளத்தை தொடை தட்டுகிறார்கள். குழந்தைககு diaper மாற்றி்க் கொண்டே, ஆலாபனைக்கு நடுவில் சபாஷ் போடுகிறார்கள். கர்னாடக சங்கீதம் எங்கோ எஸ்கேப் ஆகிறது.

  • August 12, 2006

    ஏறக்குறைய சொர்க்கம்

    ஒரு வருஷம் இருந்தால் போதும், சியாட்டல் போதும் போதும் என்றாகிவிடும். சென்னையில் மழையே இல்லை என்று சொல்பவர்களில் ஒரு பத்து பேரை சியாட்டல் அனுப்பினால், மவனே !! ஆள விடு என்று ஒடிவந்து விடுவார்கள். ஆனால் மைக்ரோ சாப்டும் மயூரியும், தமிழ் மனங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மைக்ரோ சாப்டில் தமிழ் ஆசாமிகள் அதிகம் போலிருக்கிறது.

    மைக்ரோ சாப்ட் பற்றி தெரிந்தவர்களுக்கு, தெரியாத மயூரி பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. மயூரி ஒரு மளிகை கடை. அவ்வளவேதான். ஆனால் நீங்கள் மயூரி போனீர்களேயானால், அங்கு கேட்கும் டயலாக்குகள் படு சுவாரசியமானவை.

    “ஏம்மா நான் வேணும்னா எடுத்து தரட்டுமா” – CPWDல் இருந்து ரிடையர் ஆகி மகள் பிரசவத்திற்காக வந்த அப்பா.

    “உளுத்தம் பருப்பு சின்ன பாக்கட் தான் இருக்காம். உங்களுக்கு அது கிடைக்கிற வரைக்கும் இட்லி கெடயாது. சீரியல் தான்” – ஒரு சுடிதார் மாமி, ஜீன்ஸ் மாமாவிடம்.

    “ஏங்க உங்க செல்போனை குடுங்க, அர்ச்சனா நம்பரை நோட் பண்ணிக்கலாம்” – போன வாரம் தான் வந்து இறங்கியதால், ஜந்துக்களை போல அமெரிக்காவை பார்க்கும் புதுப் பெண் தீபா.

    இப்படியாக எங்கு திரும்பினாலும் தமிழ்.

    தமிழ் சங்கத்தில் ஈ ஓட்டுகிறார்கள். மயூரியில் தமிழ் வழிகிறது. ஒன்றிரண்டு ‘ஐ டோண்ணோ தமில் யார்’ தமிழர்கள் ஓப்பன் டாப் பி.எம். டபிள்யு-வில் வந்து பராத்தாவும், தால் மக்னீயும் வாங்கி போவார்கள். அவர்களை லூசில் விட்டு பார்த்தால், தமிழ் வளர்கிறது. Atleast Tamil continues. தமிழ் காதில் கேட்கும் பொழுது குஜால்சாக இருக்கிறது. ஏறக்குறைய சொர்க்கம். ஏறக்குறைய.

  • August 2, 2006

    கிறுக்கல் பலவிதம் !!

  • July 26, 2006

    on a sabbatical. p.s –

    on a sabbatical.

    p.s – commenting system disabled to tackle spammers, while being away.

  • July 24, 2006

    Suhasini partly scripting Guru

    On Mani Ratnam’s Guru –

    I have scripted the first 20 scenes of Guru. Mani bought me a ticket and asked me to go to England, where my sister lives. He sent me blank paper and some ideas, so it was a paid holiday. Mani grew up in the city, whereas I am from a small village even though my family was full of lawyers. I went to a government school and know the nuances of village life better. Guru is a village film in the beginning, before it shifts to the city.

    On working with Mani Ratnam –

    Mani wanted me to work in Anjali, but he thought even that wasn’t good enough for me. He wanted to have something substantial to cast me. I would like to be directed by Mani Ratnam but, of course, it is not a big deal. I know the man. I think Balachander will make me act better. Mani’s characters will be good but, when it comes to performance, I think Balachander is even better; or, for that matter, Bharati Raja, Mahendran or Kranti Kumar. Mani has considered me for many of his films — Mouna Ragam, Nayagan (for the daughter’s role). He is a good director — he does not need a co-director. He just needs help with writing so he can concentrate on the making. I wrote the dialogues for Iruvar.

    Read more from the Rediff’s interview with Suhasini Maniratnam.

←Previous Page
1 … 97 98 99 100 101 … 322
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • gurukirthigavasan.com
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 28 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar