kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • March 23, 2010

    you attract me towards you!

    The leading scene to the song Mannippaaya is probably the only contribution of Vinnaithandi Varuvaaya to Tamil Cinema. And a very good one. It isn’t different but a very clichéd one. The way it was passionately shot made all the difference. With such a well rendered song from Rahman and Shreya, Gautam had only one choice, to build it up very well. The whole song was ecstatically sung and a major part of the song was picturized in the same way. Especially when Simbhu sings animatedly when driving a bike, been there done that.

    The Alleppey night, the boat, the lyrics, the love struck Simbhu and Trisha, the choreography and even the graphically falling star all support Mannippaaya’s heat. One would wish if the whole song never moved from that place. As the song divulges into other dreamy sequences and montages, it looses the passion of the night where it starts. Nevertheless it was the only scene I loved in the film. And ofcourse, some parts of Aaromale.

    Gautam sticking to Simbhu’s point of view and not showing an extra scene of Trisha when Simbhu not being present is good screen-writing but his biggest problem are the dialogues. He should probably take help from someone else or stop repeating the, “I want to make love to you” lines. Seems super artificial when squeezed into real-life situations.

    P.S: The Thirukural harmony in Mannippaaya sounded unrefined.

  • February 24, 2010

    வீடு

    ”திஸ் இஸ் ஆஸ்சம்”.

    “தாங்ஸ் பிரவீன்”

    “ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல”

    ” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி நினைக்கறதில்ல” என்று காப்பியை உறிந்து கொண்டே சொன்ன கணேஷை வியந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    “ வெரி ட்ரூ. ஆனா பார்த்திபன் கனவுல ஸ்ரீகாந்த் சொல்லுவான், வீடு என்ன மியூசியமா? எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைச்ச மாதிரி இருக்க. இவர் அதை புடிச்சுண்டுட்டார். அண்ட்ராயர் முதக்கொண்டு ஹால்ல தான் அலக்கழியும்.”

    ”அரூ..இட்ஸ் ஓக்கே…” என்றவனை திரும்பி ஒரு முறைப்பு விட்டு மீண்டும் ஆரம்பித்தாள், “உக்காந்த இடத்தில காப்பி வரணும். குடிச்சிட்டு எங்கயாவது ஹீட்டர் கீழ வெச்சுட்டுப் போய்டுவார். கேர்லெஸ் நம்பர் ஒன். எத்தனை சட்டை வச்சிருக்கார்னு கேளுங்க, தெரியாது. மை டாட் வுட் கில் மி இஃப் ஐ வாஸ் லைக் திஸ். இவரோட ஆபீஸ் தான் இவரோட முத வைஃப். நானும் பசங்களும் இவரோட ஹாபி” என்று கண்ணை சுழற்றியபடி பேசிக் கொண்டே போனாள் எனதருமை அருணா.

    அந்த இடத்தை விட்டு மெல்லமாய் நகர்ந்தேன். இந்த சனிக்கிழமை மாலை எனக்கு சரியில்லை போலும்.

    அந்த வீடு பளிச்சென்று இருந்தது. வேக்யூம் செய்யப்பட்ட கார்பெட்டுகள், துடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிகள். எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரி இருந்தது. நடராஜர் சிலை துடைக்கப்பட்டு வருபவர்களை வரவேற்கிற மாதிரி வைக்கப்பட்டிருந்தது. போஸ் ஸ்பீக்கரில் மாலி குழலூத, ஒருவித ஆஃப்டோன் கலர் சுவரில் கோலாஜாக பேமிலி போட்டோஸ். டிபிகல் சஃப்யர்பன் ஹவுஸ். பாஸ்டனில் இருந்து இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஆஷ்லாண்டில், 3000 சதுர அடியில் கட்டப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வீடு. ஐநூறாயிரம் என்று சொன்னதாய் ஞாபகம். வீட்டு வாசலில் தி ராஜாரமன்ஸ் என்று போர்டு சொல்லிற்று.

    “இதல்லாமே எப்பவுமே இப்படித் தான் இருக்குமா” என்று அருணா கணேஷின் மனைவியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அர்விந்தும் சமிக்‌ஷாவும் அவர்களின் குழந்தைகளுடன் மாடிக்கு சென்றுவிட, அந்த நடராஜர் சிலையை ரசித்தபடி நின்றிருந்தேன்.

    “பசங்க சாப்டுட்டாங்க. கமான் லெட்ஸ் ஹாவ் டின்னர்”, கணேஷின் மனைவி செல்வி.

    டேபிளில் பரிமாறப்பட்ட டின்னர். எங்களுடைய வீட்டில் எப்பவுமே செல்ஃவ் சர்வ் தான். இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது. விருந்தினர் வந்தாலும் கூட டைனிங்கில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, அவரவர் எடுத்துக் கொள்ளும் ப்ஃபே சிஸ்டம் தான்.

    “எப்பவுமே இரண்டு செட் கட்லெரி இருக்கும். ஒண்ணு டிஷ்வாஷர்ல இருந்துச்சுன்னா, அடுத்த செட். அதனால வீ கேன் டேக் விசிட்டர்ஸ் எனி டைம். சுத்தமா வெந்நீர்ல க்ளீன் பண்ணி உள்ள வெச்சுருவோம்” என்றெல்லாம் செல்வி சொல்லிக் கொண்டே போக, அரு என்னை கொஞ்சம் பாவமாய் பார்த்தாள். கணேஷ் பெருமிதத்தில் இன்னும் ரெண்டு கரண்டி உருளைக்கிழங்கை எடுத்துப் போட்டுக் கொண்டார்.

    “சூப்பர் சமையல். ரொம்ப தாங்ஸ். இதோ கை அலம்பிட்டு வந்து மேல பேசரேன்” என்று சொல்லிக் கொண்டே கெஸ்ட் பாத்ரூமை தேடிக் கொண்டே போனேன்.

    “டாடி!” என்று சமிக்‌ஷா கத்துவது மாடியிலிருந்து கேட்டது.

    “ஒண்ணும் இருக்காது. அவளுக்கு எப்பப் பாத்தாலும் ஒரே அடம்” என்று சொன்ன அருணாவுக்கு காது கொடுக்காமல், அப்படியே மேலே ஓடினேன்.

    எதிர்ப்பட்ட ரூமில் லைட் போடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த போது, சமிக்‌ஷா ஸ்பான்ஜ் பாப் பொம்மைக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். ”ப்ளீஸ் டோண்ட் ஃபைட் வித் ஹிம்” என்றேன். “சரி டாடி!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சண்டையிட ஆரம்பித்தாள்.

    அந்த குழந்தைகள் ரூம் கூட சுத்தமாய் இருந்தது. எல்லா பொம்மைகளையும், ஒரு ஹாமக்கில் கட்டி தொங்க விட்டிருந்தார்கள். தரை சுத்தமாக இருந்தது. இரண்டு குழந்தைகள் அந்த ரூமில் வசிப்பதற்கான அறிகுறி கூட இல்லாமல். வீட்டின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றியது. அதைவிட வீட்டுக்கு போனவுடன் அருணாவிடமிருந்து விழம் டோஸ் பற்றி கவலை அதிகரித்தது.

    ரூமை விட்டு வெளியே வந்தேன். இதைத் தவிர இரண்டு பெட்ரூம்கள் இருப்பதாக பட்டது. லைட் போடாததால் சரியாக தெரியவில்லை. கை அலம்பாதது ஞாபகம் வந்தது. எதிரில் பாத்ரூம் தெரிய, உள்ளே சென்று லைட் போட்டேன்.

    கையலம்பி விட்டு, பக்கத்தில் தொங்கும் டவலில் கை துடக்கும் போது கண்ணாடியை பார்த்து, ”நீயும் இருக்கியே வீட்ட பத்திக் கூட அக்கறையில்லாம” என்று ரொம்பவும் மனதுக்குள் பேசினேன். டீஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டேன். அப்போது தான் அங்கே பரவியிருந்த அமைதி உரைத்தது. எதிரில் பாத் டப்பை மூடியிருந்த கர்ட்டன் அழகாயிருந்தது. துணியா ப்ளாஸ்டிக்கா என்று தொட்டுப் பார்க்க நினைத்தேன். ப்ளாஸ்டிக்.

    அப்போது என்னவோ தோன்ற, அந்த திரைச்சீலையை சற்று தள்ளி டப்பினுள் எட்டிப் பார்த்தேன். பயந்து போய் கையை பின்னுக்கு இழுத்தேன்.

    மூன்று…மூன்று பேர், ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சீலையை திறந்த என்னை சற்றே பதட்டத்துடன் பார்த்தார்கள். அவர்கள் மனிதர்கள் என்று சொல்ல முடியாது. குள்ளமாய், க்ரே கலரில், ரொம்பவே அழுக்காய். தலையில் இரண்டு சிறிய வெள்ளைக் கொம்புகள் தெரிந்தன. நகங்கள் விரல் நீளத்துக்கு வளர்ந்திருந்தன. சீராய் ஆனால் வெளியே தெரிகிற மாதிரி மூச்சு விட்டுக் கொண்டு, என்னை ரொம்பவே பயத்துடன் பார்த்துக் கொண்டு.

    எதாவது பேச வேண்டுமா என்று கூட தெரியாமல், திரைச் சீலையை மூடி விட்டு, லைட்டை அணைத்து வெளியே வந்தேன். குழந்தைகளை முதலில் கிழே கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். பாத்ரூமிற்கு எதிரில் இருந்த அலமாரிகளின் கதவை திறக்க ஏன் தோன்றியது என்று புரியவில்லை. மெதுவாய் சத்தமிடாமல் திறந்தேன்.

    டிஷ்யூ பேப்பர், க்ளீனெக்ஸ், காரெல், ப்ளாஸ்டிக் பேக் இத்தியாதி இத்தியாதி எல்லாம் இருந்தன. தலை சற்று மேலே உயர்த்தி மேல் அலமாரியில் பார்த்த போது, இரண்டு பேர், அதே மாதிரி, அரண்டு போய், தன் சிறிய கால்களை கைகளால் கட்டிக் கொண்டு, என்னை பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களை சற்று உற்று நோக்கினேன். ஐந்து விநாடிகளுக்கு.

    கதவை மூடிவிட்டு, இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினேன்.

    ”அரூ…ஆபிஸ்லேர்ந்து போன். ஐ ஹாவ் டு கோ சூன். கம் லெட்ஸ் ஸ்டார்ட்…”

  • February 22, 2010

    ஊசி

    ஹப்பா….செம ஜம்ப். என்ன ஒரு நாற்பதடி இருக்குமா? குதிக்கும் போது வலி தெரியாது, அதைப் பற்றி எனக்கும் கவலையில்லை. இந்த வலியை ஓடிக் கொண்டிருக்கும் அந்த ப்பாடுக்கு கொடுக்கப் போகிறேன்.

    கால் தரையில் பட்டவுடன் ஓட்டமெடுத்தேன். ஒரு மணிக்கு ஐம்பது கி.மீ வேகம். நெஞ்சடித்துக் கொண்டிருந்தது. ரத்தத்தில் ஏற்றப்பட்டிருந்த ரசாயனம் கொடுத்த வேகம். ரசாயனத்தால் உடல்நலக் கவலையில்லை என்றார்கள் சக ஊசிக்காரர்கள். அவன் வேகமாய்த் தான் ஓடிக் கொண்டிருக்கிறான். தன்னைத் துரத்தும் போலிஸ்காரனை அறியாமல். காட்டுத்தனமாய் அவனை துரத்தியபடி நான். அவன் பிணமாகவாவது வேண்டும் என்று தானே சொன்னார்கள்.

    இங்கிருந்து நகர்ந்தபடி இருக்க வேண்டும். இவனைப் போல மற்றவர்கள் இருக்கலாம். இங்கேயே இருந்தபடி மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள நான் தயாரில்லை. படபடத்துக் கொண்டிருந்த நெஞ்சையும் உயிரையும் சற்றே கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இங்கு எதோ இருக்கிறது, நின்று விட்டால் திரும்பி வந்து அடித்துவிடும். ஓட வேண்டும்.

    ஐ.டி கார்டில் ஸ்பெஷல் ஸ்பீட் க்ருப் என்று போடப்பட்டிருக்கிறது. என்னை இந்த ஊசிக்கார ஃபோர்சில் தேர்தெடுத்தார்கள் என்று தெரியும். ஏன் என்பதை பற்றி மயித்துக்கும் கவலையில்லை. என்னுடைய தற்போதைய கவலையெல்லாமே, தூரத்தில் கேட்கும் காலடிச் சத்தங்களும், பிய்ந்து போய் தொங்கும் என் முட்டுச் சதை எரியுமா என்பதைப் பற்றித் தான். மக்கள் என்னை மாதிரி ஓட முடியாது. மக்கள் என்று குறிப்பது கிரிமினல்களை. நரக வாசலுக்கு தங்களுடைய உறுப்புக்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகப் போகிறார்கள். ஆனால் அதற்கு முன் இந்த கம்னாட்டிகளை மவுண்ட் ரோடை நக்க வைக்கப் போகிறேன்.

    காலடிகள் கேட்பது நின்றுவிட்டது. ஒளிந்து கொள்ள வேண்டுமா? இப்படியே உட்கார்ந்து கொள்ளலாம். ஒரு நிமிடத்திற்கு. கண்ணை மூடிக் கொண்டு. காத்திரு.

    மூச்சு சீராகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எனக்கு துப்பாக்கிகளை கொடுப்பதில்லை. நான் கேள்விப்பட்ட வரை ஊசிக்காரர்களுக்கு துப்பாக்கியில்லை. ஊசிக்குப் பின் அவற்றை சரியாக உபயோகப்படுத்த முடியாது என்பதால். இந்த இரவை விடுவதாயில்லை. அவன் கையில் கிடைத்தால் மண்மூட்டையைப் போல அவன் முகத்தைப் பதம் பார்க்கப் போகிறேன். மூச்சு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்தது. ம்ம்…. இனிமேல் அனிதாவை பார்க்க முடியுமா என்று தோன்றியது. என்ன ஆயிற்று அவளுக்கு?

    தூ….அந்த தேவடியாமகன் ராஜாவோடு சேர்ந்து என்னை ஏமாற்றியவள்.

    சத்தியமாய் ராஜா மாதிரி கழிசடையாய் இருக்க என்னால் முடியது. ஹூம் ஹூம்.

    பாக்கெட்டிலிருந்து எடுத்து இடது கையில் மற்றுமொரு ஊசி போட்டுக் கொண்டேன். அடுத்த நொடி மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். சே…என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன். முதலில் நினைப்பதை நிறுத்து கமாண்டோ. வயதான பெண்மணியை கொன்று விட்டு தப்பி ஓடும் அந்த மாக்கானைக் கண்டுபிடித்து, நெஞ்சாங்கூட்டை பிய்த்துப் போடு. புத்திசாலித்தனமான எண்ணம். இன்னுமொரு மேம்பாலத்திலிருந்து இன்னுமொரு நீண்ட ஜம்ப். அதோ ஓடிக்கொண்டிருக்கிறான் ப்பாடு. எனக்கு எதன் மேலோ கோபம் வந்தது, கொஞ்ச நேரத்தில் அவனும் அதை தெரிந்து கொள்வான்.

  • February 17, 2010

    And that’s how

    Picked up a dozen packs of Milk Bikis from the local Indian store. It was in a new wrapper. I was shocked. While tripping in Chennai, I bought a Milk Bikis pack in a totally new packaging and found the design of biscuit completely changed. Instead of Britannia embossed in the middle and surrounded by flower patterns, it had squares all over the biscuit. That wasn’t the biscuit design thats imprinted in me. After all its probably the only biscuit of choice on any given day followed by Bourbon by the same company. Even though it had the same taste, it felt like a different biscuit.

    So I was indeed shocked looking at the new pack today. When opened, to my relief, I found it had the same design. Somehow they haven’t changed the design, atleast yet, for the exports. So that’s good. And that’s how I got my biscuit back.

    More Biki love, here and here.

  • February 10, 2010

    log, logout

    Crude and Cheesy post ahead.

    I get the internet democracy and all but reading everyone’s opinion on the new social networking overload seems like a complete waste of time. I know one wants to try everything thats new and free on the net but one doesn’t have to always start acting like a tech guru on each .x version release of a software.

    Let me ask a question. When was the last time, you picked a piece of log aka dead wood book and read it start to finish including the blurb. I know you have Brown’s The Last Symbol hidden under your pillow for two weeks now. That paperback copy of Twlight saga is lying on your bookshelf for twelve days and 24 minutes and 16.5 seconds now. The first edition copy of recently passed away Salinger’s Catcher in the Rye is crying to be read for months now. The recently bought Agam Puram Anthapuram is enjoying some good shelf life in your bedroom. Last week’s Vikatan and India Today are folded and left unread on the couch. It doesnt matter that you dont like to read literary works of Jorge Luis Borges or Pablo Neruda. You like to read just ‘normal’ books. I get that. But when will you read them?

    When can you actually close the browser, shut down your laptop and actually read the first page of Seth Godin’s latest best seller? When will you be free of not having to login to the social .coms, miss all the carefully created online personas’ effing status updates and not be nervous about it? Its not important to just have a shelf full of carefully selected coffee table books. To read without any interupptions is an act of freedom in the contemporary society. How about today ? Say yes to the Log. Now, Logout. Thanks.

←Previous Page
1 … 28 29 30 31 32 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 25 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar