kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • November 12, 2006

    கட்டிப்புடி வைத்தியம்

    free hugs campaign
    #

    வசூல்ராஜாவில் கமலின் அம்மாவாக நடித்த ரோஹினி ஹத்தங்காடி, கமலுக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டிப்புடி வைத்தியம், உலக பிரபலமாகியிருக்கிறது.

    இரு வருடங்களாக சிட்னி் கடைத்தெருவில், யுவான் மான்[Juan Mann] என்னும் இளைஞர், வாரம் ஒரு நாள் முழுவதும், free hugs என்றெழுதிய ஒரு போர்டை பிடித்துக் கொண்டு, போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கட்டிப்புடி வைத்தியம் செய்கிறார். கட்டிப்புடி வைத்தியம் கட்டாயம் கிடையாது. ஒரே ஒரு சின்ன ஹக் தான்.

    இந்த free hugs campaignனுக்கு யுவானின் காரணம்- என்ன தான் social communities, world is a small village என்று ஜல்லியடித்தாலும், மனிதர்கள் தனிமைப்பட்டுக் கிடக்கும் இந்த சமுதாயத்தில், எல்லோராலும் ஒரு சின்ன மாற்றம் ஏற்படுத்த முடியும் என்னும் மனிதம் தான். ரோட்டில் செல்லும் ஏதோ ஒரு அன்னியனுக்கு கிடைக்கும் அந்த ஒரு நிமிட அணைப்பினால், வாழ்க்கையின் மீது சின்ன hope எற்படுமேயானால், free hugsக்கு கிடைத்த வெற்றியாகும்.

    Sick Puppies என்னும் ஆஸ்திரேலிய டீனேஜ் ராக் பாண்ட், ப்ரி ஹக்ஸுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து ஆச்சரியப்பட்டு , ஒரு மெட்டிசைத்து, யுவானை வைத்து ஒரு மியுஸிக் விடியோ செய்தார்கள். You Tubeல், செப்டம்பர் 22, 2006 ரிலீஸ் செய்யப்பட்ட அந்த விடியோ ஆறு நாட்களில் பத்து லட்சம் முறை பார்க்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததை, வரலாறு சொல்லும்.

    ஓவ்வொரு நாட்டிலும், Free Hugs Campaign ஒரு மக்கள் இயக்கமாக ஆரம்பமானது. Sick Puppies பாண்ட் பிரபலமாகி, இப்போது லாஸ் ஏஞ்சலஸில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இதை ஆரம்பித்து வைத்த யுவான், ஓப்ரா ஷோவில் கட்டிபுடி வைத்தியத்தை புட்டு புட்டு வைக்கிறார்.

    ஒரு மாதத்திற்க முன்பு சென்றிருந்த Salmon Days Festivalலில் நான்கைந்து காத்திக் யுவ யுவதிகள், free hugs போர்டை பிடித்து கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். நானும் இது ஏதொ myspace மேட்டர் போலிருக்கிறது என்று கட்டிப்புடிக்காமல் வந்து விட்டேன். இப்போது படித்தவுடன் தான் அவர்களின் நல்லெண்ணம் புரிகிறது.

    நம்மூரில் இது ஒத்துக் கொள்வார்களா என்று சொல்வதற்கில்லை. சுற்றுலா செல்லும் மாமு, மச்சிகள் free hugs மேட்டரை நகரத்திலேயே விட்டுச் செல்வாராயின், நலம். முறுக்கு மீசை பிரகாஷ் ராஜ் மாமன்கள், அவர்களது திருப்பாச்சிகளுடன் free hugsக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • October 31, 2006

    கடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ்

    வழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார்.

    இந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி !! திருடனை பிடித்ததற்கு உனக்கு பர்கர் கிங்கில் இருந்து ஒரு லார்ஜ் ஆனியன் ரிங்க்ஸ்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டே வெளியே போனேன். ஸ்பானிஷ் பாட்டி, ஸ்பார்கியை லீஷில் பிடித்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் கடிகாரத்தை பார்த்து ஸ்பார்கி எகிறி எகிறி குரைத்த போது உரைத்தது. இன்னிக்கு Daylight Saving Time முடிகிறது. Spring forward , Fall Back என்பார்கள். அப்படியானால் நேற்று இரவு 2 மணிக்கு, கடிகாரத்தை திருப்பி 1 மணிக்கு வைத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் மிச்சம். மாற்றாத என் கடிகாரத்தில் காட்டிய ஆறரை ஆக்சுவலாக இப்போது ஐந்தரை காட்ட வேண்டும். ஆக திருடனை பிடிக்க எழுந்ததில், வீக்கெண்ட் தூக்கம் பாழ்.

    —
    குளிர் வந்தாகிவிட்டது. நேற்றும் இன்றும் ஸீரோ டிகிரியில் வீசிய காற்று, மூடிய ஜன்னல்களில் நுழைந்து, இன்னும் இரண்டு போர்வை கேட்கிறது. மக்கள் நடமாட்டம் மால்களில் குறைகிறது. எல்லோரும் எதோ சிட்காம் பார்த்துக்கொண்டோ, இண்டர்நெட்டில் துணை தேடிக்கொண்டோ, பாப்கார்ன் கொறித்து, அமெரிக்க ஒபிஸிட்டியை ஆளுக்கு ஒரு calorieயாக கணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாத calorie consumptionக்காக சூப்பர் பவுலும், என்.பி.ஏவும் காத்துக் கொண்டிருக்கின்றன.

    என்ன தான் மழை அடித்தாலும் ரோடில் தண்ணி பெருக்கெடுப்பதில்லை. குண்டும் குழியும் காணக் கிடைப்பதில்லை. எந்த கழக கண்மணி நாட்டை ஆண்டாலும், infra-structureஐ மட்டும் தப்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மூன்று மாதங்களில் நம்மூர் ஜெமினி பிரிட்ஜ் மாதிரி ரெண்டு மடங்கு பெரியதாக பிரிட்ஜ் கட்டி ஒரு வீக்கெண்டில், திறப்பு விழா நடத்தாமல், இங்கு வீற்றிருக்கும் நகராட்சி தலைவர் அவர்களே என்று சோடா உடைக்காமல், நடை திறக்கிறார்கள்.

    —
    போன வாரம், NPR என்னும் பொது மக்களின் நன்கொடைகளால் நடத்தப்படும் Public Radio கேட்டுக் கொண்டே கார் ஓட்டிய போது விவிதபாரதியின் நேயர் விருப்பத்தையும், கடயநல்லூர் ராமசாமியையும் மிஸ் பண்ணினேன். இது போல் தெரியாத ஊர்களிலிருந்து ராமசாமிகளும், புழுதிவாக்கம் மோகன்களும், கைக்காங்குப்பம் சரவணன்களும், குடவாசல் கோமதிகளும், கேட்கும் பாடலை ஒலிபரப்பும் விவிதபாரதியும், அதை சரளமாக படிக்கும் அந்த வெண்கல குரலையும், அதற்கு பின் வரும் அந்த not-so-popular பாடலையும், மறுபடி கேட்பதெப்போது. தொலைந்து போனது நானா, அவர்களா அல்லது நாங்களா ?

  • October 30, 2006

    மணி ரத்னம் – ரஹ்மான் – குரு

  • October 23, 2006

    சென்னையிலிருந்து புத்தகங்கள் – 1

    என்ன தான் சென்னையிலிருந்த போது தமிழ் புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தாலும், அமெரிக்கவாசியான பின்பு தான், தமிழ் இலக்கிய ஆர்வம் பிய்த்துக் கொள்கிறது. தெரிந்தவர்களில் யார் வருவதாய் தெரிந்தாலும், உடனே ஒரு ஜிமெயில் பறக்கும். புக்ஸ் வாங்கி வர முடியுமா ? முடிந்தால், இந்தா பிடியுங்கள் லிஸ்ட். பலர் புத்தகம் தானே, டான்டெக்ஸ் இல்லாத வரை சரியன்று ஒத்துக் கொண்டு வாங்கி வருவார்கள். சிலர், இவன் யாருடா சுத்த கேணையா இருக்கான் என்று ஜகா வாங்குவார்கள். தப்பில்லை. என்னை பொருத்த வரை, வாங்கி வந்தால் சரி, இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது இண்டர்நெட்டு.

    எனக்கு புத்தகம் வாங்க நண்பர்களை நான் செலுத்துமிடம், New Book Lands. முன்பொரு முறை சுஜாதாவிடம் கேட்ட பொழுது, அவர் சொன்ன இடம் இது. என்ன சார், லாண்ட்மார்கில வைரமுத்துவை தவிர தமிழ் புத்தகமே இல்லை. எனக்கு தெரிஞ்சு சென்னையில நல்ல த்மிழ் புக்கு கடையே இல்ல போல இருக்கு, என்று குறைப்பட்டுக் கொண்ட போது, அப்படியெல்லாம் இல்லை நம்ம T.nagar New Book Lands இருக்கு என்றார். தேசிகனிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு, ஒரு மே மாத சனிக்கிழமை வெய்யிலில் மண்டை காய்ந்து சென்றேன். சற்றே வழுக்கையும் சிரித்த முகமுமாய், ஒருவர் வாங்க வாங்க என்றழைத்தார். ரைட்டர் சுஜாதா சார் தான் இங்க என்னை அனுப்பினார் என்றேன். அவர் பக்கத்தில் இருந்த அந்த காஷியர் பெண்ணிடம் ஏதோ சொல்ல, வந்தது சில்லென்று ஒரு டம்ளர் மோர். முதலில் நான், சுஜாதா பெயரை namedrop பண்ணியதால் தான் மோர் கொடுத்தார்கள் என்று நினைத்தேன். எனக்கு பிறகு ஊதுபத்தி விற்க வந்தவருக்கும் மோர் கொடுத்த போது தான், அட எல்லாருக்கும் கொடுக்கிறாங்க என்று புரிந்தது.

    புக்லாண்ட்ஸின் மானேஜர், ஸ்ரீனிவாசன், சிரித்த முகத்தினன். தமிழ் புத்தக வாசம் கொண்டவர். எந்த புத்தகமாயிருந்தாலும், எங்கிருந்தாலும் சரி, வாங்கித்தருவார். New Book Landsசுக்கு ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக புத்தகம் வாங்குவீர்கள். நர்மதா பதிப்பகத்தின் ஒரு அங்கம். அங்கு புத்தகம் வாங்க சென்ற என் அருமை நண்பன், இவனுக்கு நாம புக்கு வாங்கி அனுப்பி கட்டுபுடி ஆகாது, இந்த கடையில கேட்டு பார்ப்போம் என்று விசாரிக்க, ஸ்ரீனிவாசன் சொன்ன பதில் எனக்கும் பிடித்திருந்தது.

    முதல் முயற்சியாக ஒரு 15 புத்தகத்தின் லிஸ்டை orders@newbooklands.comக்கு அனுப்பினேன். அவர்கள் புத்தகத்திற்கும் + அஞ்சல் செலவாக ஒரு 150 இந்திய ருபாயும் கட்ட சொல்லி ஒரு creditcard பாங்க் லிங்க்கு அனுப்பி, நான் செலுத்தி, புத்தகம் சென்னையிலிருந்து கிளம்பியது. புத்தகங்கள் வந்து சேர்ந்தன. 80 நாட்கள் கழித்து. அத்தனை வெயிட் செய்ததால் புத்தகங்களை கட்டிக் கொள்ளாத குறை. விசாரித்து பார்த்தால் புத்தகங்கள் வந்தது கப்பலில் என்று தெரிந்தது. புத்தகம் வாங்கித் தள்ளும் ஆசாமியாய் இருந்து, கொஞ்சம் வெயிட் செய்ய முடியுமாயின், அஞ்சல் செலவை மிச்சப்படுத்தி இன்னும் இரண்டொரு புத்தகங்கள் sneek-in செய்ய முடியும். போன வாரம், அடுத்த பெரிய லிஸ்டும் கொடுத்து புத்தகங்களும் கப்பலேறி விட்டன.

    திரை கடலோடி வந்த பர்ஸ்ட் லிஸ்ட் புத்தகங்கள் –

    கற்றதும் பெற்றதும் 1 – சுஜாதா [டாய்லெட்டில் கை தவறி தண்ணியில் விழுந்ததற்காக replacement] [விகடன் பிரசுரம்]
    அசோகமித்திரன் பதிப்புலகம் – ஞாநி [கலைஞன் பதிப்பகம்]
    ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா [சுஜாதாவின் well researched. magnum opus.] [உயிர்மை]
    வஸந்த் வஸந்த – சுஜாதா [உயிர்மை]
    ஒரே ஒரு துரோகம் – சுஜாதா [விசா]
    வண்ணத்துப் பூச்சி வேட்டை – சுஜாதா [உயிர்மை]
    ரப்பர் – ஜெயமோகன் [கவிதா]
    பின் கதை சுருக்கம் – பா ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
    வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி [கிழக்கு பதிப்பகம்]
    சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுப்ரமண்ய ராஜு [கிழக்கு பதிப்பகம்]
    மெர்குரிப் பூக்கள் – பாலகுமாரன் [ விசா]
    ஜன கண மன – மாலன் [கிழக்கு பதிப்பகம்]
    குதிரைகளின் கதை – பா.ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
    ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன் [கவிதா பதிப்பகம்]
    ஆகாயத்தாமரை – அசோகமித்திரன் [கிழக்கு பதிப்பகம்]

  • October 8, 2006

    இருவரில் ஒருவர்

    மு க - ராம்கி

    நண்பர் ராம்கி தன் இரண்டு[1,2] புத்தகங்களையும், சியாட்டல் வந்த மற்றோரு நண்பர் மூலம் அனுப்பியிருந்தார். ராம்கி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கிய சந்திப்பில் தமிழ் ப்ளாகராக அறிமுகமானார். நல்ல நண்பர். சக ரஜினி ரசிகர். எப்பொழுது கேட்டாலும் சென்னையிலிருந்து புத்தகம் வாங்கி அனுப்புவார். இதெல்லாம் தாண்டி, மு.க புத்தகத்தின் மூலம் ஒரு நல்ல எழுத்தாளராக ஆகியுள்ளார்.

    படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றிய இரண்டு விஷயங்கள் இவ்விவை. கருணாநிதி என்பவர் இல்லாமல் தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு, ஜோதிகா இல்லாத சூர்யா போல இருக்கும். இந்த மனிதரை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவருடைய அனுபவதிற்காக, மதிக்கப்பட வேண்டியவர்.

    அந்த விடிகாலை கைதில் ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம், ஒரு நல்ல prologue-ஆக அமைகிறது. அதன் பின் திருக்குவளையில் கருணாநிதி பிறப்பதற்கு சற்று முன்பு ஆரம்பித்து, ஜெட் ஸ்பீடில் பறக்கிறது. மாலன் சொல்வது போல, கலைஞர் வாழ்கையில் தெரியாத விஷயங்களில் புத்தகம் சுவாரசியமாகவும், தெரிந்த விஷயங்களில் கொஞ்சம் மெதுவாகவும் இருக்கிறது. ஆனால் இது எழுத்தாளரின் தவறல்ல. நமக்கு தெரிந்த விஷயங்களும் சுவாரசியமாய் இருக்குமாயின், ராம்கி exaggerate செய்திருக்கிறார் என்பது தெரிந்து விடும்.

    மணி ரத்தினத்தின் இருவரில் கலைஞரின் கதாபாத்திரத்தில் கள்ளம் இல்லாமல் ஒரு வித புரட்சி மனப்பான்மை இருந்தது. ராம்கி தன் புத்தகத்தில் விலாவரியாக விவரிப்பதால், ஆரம்ப காலத்தில் பலரின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் தன் கலக எழுத்துக்களை யும் பேச்சுக்களையுமே பயன்படுத்தினார் போன்ற வாக்கியங்கள் highlight ஆகின்றன.

    மையக் கரு கலைஞராக இருப்பதால், இந்தி எதிர்ப்பு, எமர்ஜென்சி, எம்.ஜி.யார் போன்ற விஷயங்களை ஊறுகாயாக தொட்டுக்கொண்டே போகிறது புத்தகம். அதே சமயத்தில் பெரியார், அண்ணா, திராவிட கழகத்தின் வளர்ச்சியும் / வீழ்ச்சியும் போன்ற எதிர்பார்க்காத விஷயங்களை சற்றே in-depth ஆக ஆராய்ந்திருப்பது, மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும்.

    இரண்டு குறைகள் அல்லது opportunities for improvement ஆக நான் கருதுவது –

    ஒன்று, மு.க வின் பர்சனல் வாழ்க்கையை பற்றி சில பக்கங்கள் போட்டிருந்தால், அவரின் ஒரு நல்ல பயோகிராபியாக இருந்திருக்கும். அவரின் திருமணத்திற்கு பிறகு, அவரின் personal வாழ்க்கையை பற்றி ஒன்றுமே இல்லாதது குறையே.

    இரண்டு, இத்தனை புத்தகத்தையும் ராம்கியால் தானே எழுதியிருக்க முடியாது. பல புத்தகங்களையும், வரலாற்றையும் புரட்டிய பின்னரே இப்படி ஒரு சிறந்த படைப்பை உருவாக்க முடியும். அப்படி இருக்கும் போது, புத்தகத்தின் கடைசியில், Bibliography போட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.

    எப்படி இருந்தாலும், இந்த புத்தகத்தை படிப்பது, தமிழ் கூறும் நல்லுலகத்தில் இருக்கும் அனைவர்களுக்கும் ஒரு sneak-peek into the political history Tamil Nadu. சரள நடைக்கும், கடின உழைப்பிற்காகவும் ராம்கிக்கு ஒரு ‘ஜெ’ !!

←Previous Page
1 … 88 89 90 91 92 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar