குமுதம் டாட்காமில் ரவி பெர்னாட்டின் பேட்டிகளில், கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பா ராகவனுடனான பேட்டி ஐந்து பாகங்களாக காணக்கிடைத்தது.
தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்புத் தொழிலின் தற்போதைய போக்கு பற்றி சற்றே அலசினார்கள். ரவி பெர்னாட் கொஞ்சம் குறுக்கிட்டு் அடுத்த கேள்விக்கு தாவாதிருந்தால் இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் கிடைத்திருக்கும். பா ராகவன் எப்போதும் ஒரு convictionனுடன் பேசுகிறார். தமிழ் புத்தகங்கள் இன்னும் நிறைய விற்கபோகிறது, தமிழ் புத்தக நேர்த்தி அதிகமாகியுள்ளது, அ-புனைவுகளை[non-fiction] மக்கள் விரும்புகிறார்கள் போன்ற சில முக்கிய குறிப்புகள் பேசப்பட்டன.
என்னுடய take-aways இரண்டு, தமிழில் குழந்தை புத்தகங்கள் விற்க கிழக்கு படிப்பகத்தில் ஒரு கிளை பிரிவு உருவாக்கப்படுகிறது. தமிழ் content, புத்தகங்கள் தவிர இனி மற்ற மீடியா முலமாகவும் வெளிவர உள்ளது.
நல்ல பேட்டி, கெட்ட கத்திரி.