Skip to content

kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • October 19, 2007

    முப்பது மெட்ராஸ் நாட்கள்

    இரண்டு வருடங்களுக்குப் பின் கடும் அக்னி நட்சத்திரத்தின் நடுவே, இந்த வருடம் சென்னை சென்றிருந்த போது கண்ட விஷயங்கள் இவ்விவை.

    மீனம்பாக்கத்தில் வளைத்து வளைத்து பாலம் கட்டுகிறார்கள். ஆங்காங்கே தகரம் பெயர்ந்து ரோட்டில் நீட்டிக் கொண்டிருக்கின்றது. விமான நிலையத்தில் ஆட்டோ-ப்ரேக்குகலோடு ட்ராலி அழகாக அடுக்கி இருக்கின்றன. எக்கச்சக்கமாக பார்கிங் சார்ஜ் போடுகிறார்கள். சென்னையில் ட்ராபிக் அதிகமாகிவிட்டது. எல்லோரும் வண்டியை ‘வள்ச்சி ஓட்டிகினே’ போய்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் பல ஆயிரம் கார்கள் வானத்தில் இருந்து கொட்டிய மாதிரி இருக்கிறது. கிண்டியில் நேரு, ரவுண்டானாவை இழந்து புறா பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். லாரிகள் இடிக்காமல் இருந்தால் சரி. ராட்சத வினைய்ல் போர்டுகளில் சிவாஜி ரஜினி ஜீன்ஸில் நடக்கிறார். சிரிக்கிறார். குறுந்தாடி வைத்து ஷ்ரேயாவை வளைக்கிறார், க்கிறார், கிறார், றார்.

    சென்னை 28ன் இருபத்தி ஐந்து நாள் வெற்றியில் வெங்கட்டும் கிரிக்கெட் டீமும் எல்லா டிவியிலும் பேசுகிறார்கள். செல்விகளும் தேவயானிகளும் இன்னும் மூக்கு சிந்துகிறார்கள். ஓப்பன் செட்டிங்கில் அதிர்ஷடக்கல் மோதிரத்திற்கு, டிவியில் அரை மணி நேரம் அட்வர்டைசிங் செய்கிறார்கள். சன் டீவியின் டட்டட் டடடைங் டைட்டில் மாறியிருக்கிறது. ஆனாலும் தமிழ் மாலை என்று இன்னமும் போடுகிறார்கள். அப்படியென்றால் என்ன என்று யாரும் கேட்பதில்லை. எல்லா சேனலும் எதாவது போட்டி வைத்து கொண்டு, தங்கமும் டைமண்டும் வழங்கும் சொர்க்க பூமியாயிருக்கிறது. மெட்ரோ ப்ரியா சாயலில் இன்னும் பலர் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து டீவி ஸ்கிரீனை குத்திக் குத்தி பேசுகிறார்கள்.

    மக்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் பணமிருக்கிறது. முக்கியமாய் செல்போன் இருக்கிறது. ஐந்தில் இருவருக்கு இரண்டு போன் இருக்கிறது. எஸ்.டி.டி போன் பூத் பெண்ணிலிருந்து, காந்தி மண்டபத்தில் ஹெல்மட் விற்பவர் வரை எல்லோரும் யாரிடமோ எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோவிலிலும் தியேட்டரிலும் மால்களிலும் பல ரிங்டோன்களில் மொபைல்போன் அடித்துக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் கம்பெனிகாரர்கள் சிரித்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு நாளில் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கொள்கிறார்கள். மறுநாள் கழட்டி வைத்துப் போகிறார்கள். ராமாவரத்தில் க்ரவுண்டு 80 லட்சம் போகிறது. யாரோ வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எப்படி என்று தான் புரியவில்லை. ரியல் எஸ்டேட் விலையை வைத்து எல்லோரும் பேப்பர் பணக்காரர்களாகி விட்டார்கள்.

    ஹிந்து படிக்கும் மாமாக்கள், இப்போது டெக்கான் ஹிரால்டை சிலாகிக்கிறார்கள். குங்குமம் இன்னமும் சூப்பர்ர்ர்மா. ஸ்பென்ஸரின் அத்தனை phaseகளும் முழி பிதுங்குகின்றன. பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் தாண்டி லாண்ட்மார்க்கில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறது. பா.விஜய் ஏராளமாய் கவிதை புத்தகம் போடுகிறார். பாலிடிக்ஸில் யாரோ யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்துக்கு கூட்டம் வருவதாக தந்தி பேப்பர் சொல்கிறது. எல்லா ஸ்கூல் பசங்களும் பத்மா சேஷத்திரியில் படிக்கிறார்கள். அல்லது படிக்க நினைக்கிறார்கள்.

    டீனேஜர்கள் ஆர்குட்டில் புழங்குகிறார்கள். அல்லது மால்களில் பிகர் வெட்டுகிறார்கள். Chevy கார்களில் வந்து ஜெர்க் விடுகிறார்கள். புகை பிடிக்கிறார்கள். டேட் செய்கிறார்கள். BPOவில் ராத்திரியெல்லாம் போனில் அமெரிக்கர்களுடன் பேசுகிறார்கள். ஐடி கம்பெனிக்கள் பஸ்விட்டு ஊருக்கு வெளியே வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்கிறது. NH 45யில் நேர்த்தியாக தார் ரோட் போட்டிருக்கிறது அரசாங்கம். ஆங்காங்கே கப்பம் கேட்கிறார்கள். சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு காரில் செல்ல 45 ரூபாய் டோல் கட்டவேண்டியதாய் இருக்கிறது.

    சரவணபவனில் அதே கொஞ்சூண்டு காப்பிக்கு பத்து ருபாய் முழுசாய் வாங்குகிறார்கள். சாம்பார் இன்னமும் அதே டேஸ்டில் இருக்கிறது. தேசிகன் பிரஞ்சு தாடியில் ஊர் சுற்றுகிறார். பைக்கில் கற்பகாம்பாள் மெஸ்ஸிற்கும், அல்லயன்ஸிற்கும் கூட்டிச் சென்றார். தோசையும், சோவின் அதிர்ஷடம் தந்த அனுபவங்களும் வாங்கித் தந்தார். சீக்கிரம் நல்ல சேதி சொல்வார் என நம்பலாம். மயிலாப்பூரில் தினமும் அறுபத்தி மூவர் ஊர்சவ கூட்டம் போல் முண்டியடிக்கிறது. தி.நகரில் தெருவடைச்சானாக புது சரவணா ஸ்டோர்ஸ் வந்திருக்கிறது. எந்த ப்ளோரிலும் fire exitஐ காணோம். எல்லா பொருட்களும் உள்ளே ஒரு பத்து ரூபாய் கம்மியாய் கிடைக்கிறது. தி.நகருக்கு தனியாக ஒரு பார்கிங் strategy வேண்டும். ட்ராபிக் போலிஸ்காரர்கள் இன்னமும் அதிகமாக புகையை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கிழக்கு பதிப்பகத்தில் ஜரூராக வேலை நடக்கிறது. வாசலில் Sky is our limit, We are currently on second floor என்று போர்டு போட்டிருக்கிறார்கள். ரிசப்ஷனில் உட்கார வைத்து, இண்டர்காம் போட்டு, உள்ளே அனுப்பப்படுகிறேன். ஐடி கம்பெனி போல் தோன்றுகிறது. பா.ரா இரண்டு மணி நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தார். சுட சுட பிரிண்டாகி வந்த கம்ப்யூட்டர்ஜீயை பிரித்துப் பார்த்து, கூகிள் டாக்கில் சொக்கனிடம், பர்ஸ்ட் காப்பி வந்தாகிவிட்டது என்று சேதி சொல்கிறார்.

    கே.கே நகரில் Beer Garden ஒன்று இருக்கிறது. மற்ற இடங்களில் டாஸ்மாக்கும், பிளாஸ்டிக் கப்புகளும் இருக்கின்றன. ஐஐடியிலேயே மரங்களை வெட்டுகிறார்கள். மற்ற இடங்களில் மரமே இல்லை. சென்னை சிட்டி சென்டரின்(CCC) KFCல் ஏகபோகமாக வியாபாரம். CCC அவ்வளவு பெரியதாக இல்லை. இருந்தும் உள்ளே இருந்த கல்லூரிக் கூட்டம் ஏதோ சேனலுக்காக காமிரா பார்த்து – It’s a cool place to hang-out என்று ஒரே தொனியில் கத்துகிறார்கள்.

    முப்பது நாட்களுக்கு பிறகு இரவில் அமெரிக்கா திரும்பும் போது வானத்திலிருந்து பார்த்தால், சென்னையின் ட்யூப்லைட் வெளிச்சங்கள் அழகழகாய் மின்னுகின்றன.

  • October 19, 2007

    Tamil Cinema Montages

    From wikipedia –

    A montage sequence is a technique in film editing in which a series of short shots is edited into a sequence to condense narrative. It is usually used to advance the story as a whole (often to suggest the passage of time), rather than to create symbolic meaning as it does in Soviet montage theory. In many cases, a song plays in the background to enhance the mood or reinforce the message being conveyed.

    I guess this part of the Wiki entry was written by an Indian – a song plays in the background to enhance the mood or reinforce the message being conveyed. That’s typical bollywood style stuff.

    And we have all seen montages before we even realized it as one. An easy example of montage would be Rajinikanth’s transformation from the milkman to a Five Star Hotel owner in Annamalai.

    I’ve always loved montages. I don’t know why but I just love them. I even think, in slight extreme that an entire film could be made effectively just through montages. Akira Kurosawa is known for making montages into popular art.

    Yesterday, while traveling through the Seattle Tunnel, I was thinking of making a montage of the entire tunnel route. I don’t even have a camera to start with and that’s a different topic. But it led me to think of montages in Tamil cinema. When thinking about montages in kollywood that were made to the level of world cinema, only two of them struck me instantly. And that’s because they were elegantly made. Both of them cannot be called montages theoretically as they don’t help move the plot too much.

    The first one is truly world class. Appu Kamal trying to hang himself and Sri Vidya, his mother talking to him at a circus tent. The camera pans across the room and cuts frequently and disolves into close-ups and long shots. It may not be as vivid as I say here but it was a great one.

    The second was a shorter one in Priyadarshan’s Snehithiye. I vaguely remember the context but on a dramatic scene, the shot collapses to a different scene where the girl recalls cycling with Jothinka on a lush green park.

    Both these scenes had great BGM and was strikingly well made. Mudhal Mariyadhai had some nice montages but can’t recollect any particular one. Should anyone re-collect other nice montages in Tamil cinema, there is a comment box right below.

  • October 16, 2007

    இரண்டு படங்கள்

    chak_de_india_shahrukh.jpg

    சமீபத்தில் பார்த்த சக் தே இந்தியா!! பிடித்திருந்தது. இந்த மாதிரி நோ-நான்சென்ஸ் படங்கள் எடுத்து, ஹீரோ ஹீரோயினை இருபது பெண்களுடன் சுவிஸ் அனுப்பாமல், இடுப்பு காட்டாமல் இருந்தால் இன்னும் பிடித்திருக்கிறது. ஆனாலும் கோலி/பாலிவுட்கள் மாறுவதாய் காணோம்.

    உயிர் கொடுத்தாடும் ஒரு ஹாக்கி வீரனின் மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பிறிதொரு நாளில் அவன் கோச்சாக திரும்பி வந்து, பெண்கள் ஹாக்கி டீமை கட்டி மேய்த்து கப் வாங்கி கொடுக்கும், The Incredibles போன்றோரு கதை தான். ஹாலிவுட்டில் இதைப் போன்ற sports genre படங்கள், வாரத்திற்கு மூன்று வருகின்றன. Beaten Track.

    கபீர்கானாக வரும் ஷ.கானுக்கு ஒரு வித்தியாச படம். ரசிக்கும் படி செய்யப்பட்ட ரோல். ரொம்ப நாளைக்கு(சுவதேஸுக்கு) பிறகு shahrukhஐ பிடித்திருக்கிறது. இதற்கடுத்து ஷங்கருக்கு ரோபோவாக போகிறார். படத்தில் வரும் அந்த அத்தனை ஹாக்கி நங்கைகளும் நடிக்கிறார்கள். சண்டிகரின் சண்டைக்கார பெண் ரசிக்க வைக்கிறாள்.

    ஆங்காங்கே புள்ளரிக்கும் cliched காட்சிகள் இருந்தாலும் பாடல்களை படத்துடன் இணைத்ததற்கும், போரடிக்காத ஹிந்தி சினிமா எடுத்ததற்கும் ஷிமித் அமீனுக்கு நன்றி.

    knocked_up.jpg

    மற்றொரு படம் Knocked Up என்னும் ஆங்கில படம். Geeky Humor என்று சொல்லப்படும் வகையை சேர்ந்தது. ஓரிரவில் டான்ஸ் பாரில் சந்திக்கும் ஒரு டீவி தொகுப்பாளினிக்கும், வேலையில்ல geekக்கிற்கும் நடக்கும் ரொமான்ஸும் அதன் பின் நிகழ்வுகளும் தான் படம்.

    பச்சையாய் ஆங்காங்கே காட்சிகளும், சிரிப்புகளும் இருந்தாலும், ரசிக்க வைக்கிறார்கள். நைன் மந்த்ஸ் போல ரம்மியமான ஆனால் கெட்ட வார்த்தைகள் நிறைந்த, பிரசவ படம். Referential comedy என்று பாப் கல்ட்சரை எடுத்துக் காட்டி காமெடி செய்யும் வசனங்கள் தான் சிறப்பம்சம். Clerks 2 என்னும் படமும் இந்த வரிசையில் மற்றொன்று.

  • October 11, 2007

    பாரன்ஹீட் 451

    Fahrenheit 451 Ray Bradbury

    “You don’t have to burn books to destroy a culture. Just get people to stop reading them”, என்று பேச ஆரம்பிக்கும் ரே ப்ராட்பரியின்(Ray Bradbury) ஒரு சயின்ஸ் பிக்-ஷன் க்ளாசிக் தான் Fahrenheit 451. 1953ல் இந்தப் புத்தகம் வந்த போது, சென்ஸார் பிரச்சனையிலிருந்து சின்னப் பையன் எதோ எழுதிட்டான் என்கிற வரையில் இந்த புத்தகம் அலைக்கழிக்கப்பட்டது துரதிஷ்டவசமே. பாரன்ஹீட் 451ஐ விஞ்ஞான கதை என்று அதை ஒரு சிறு பிரிவுக்குள் அடைக்கப்பார்த்தது தான் விமர்சகர்கள் செய்த மிகப் பெரிய தவறு. சில விமர்சகர்கள் இதை ஆர்பரித்தார்கள்.

    கை மாண்டாக்(Guy Montag) என்னும் ஒரு தீயிடுவாளன்(தீயணைப்பாளன் அல்ல) பற்றி ஒரு டிஸ்டோப்பிய கதை. டிஸ்டோப்பியா(dystopia) என்பது யுதோப்பியாவின்(Utopia) எதிர்ப்பதம். யுதோப்பியாவில் நாடும் வீடும் மன்னனும் நல்லவனாக இருக்கக்கூடிய ஒரு மாய கனவு உலகம். டிஸ்டோப்பியாவில் எல்லாம் நேரெதிர். சமீபத்தில் வந்த V for Vendetta என்ற ஒரு சூப்பர் ஹீரோ படம், சிறந்த உதாரணம். அரசும் அரசியந்திரமும் மக்களுக்கு எதிரான நிலையில் இயங்கும், தற்காலத்திற்கு கொஞ்சமாய் பொருந்தும் ஒரு மாய உலகம். யுதோப்பிய இலக்கியத்தை விட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் அதிகமாகி வருவது வியப்பல்ல. ஆர்வெல்லின் 1984ம், வெல்ஸின் War of the Worldsம் கூட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் தான். மிகச் சிறந்த டிஸ்டோப்பிய படமென்று ஸ்டான்லி ஃகூப்ரிக்கின் A Clockwork Orangeஐ சொல்லலாம்.

    ஃபாரன்ஹீட் 451 நடப்பது வருங்காலத்தில். டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு அமெரிக்க நகரத்தில். மக்கள் எல்லோரும் பாஸ்ட் புட் சாப்பிட்டு, தங்கள் சுவர் உயர டீவிக்களை சதா சர்வ காலமும் பார்க்கிறார்கள். காட்டுத்தனமான வேகத்தில் வாகனங்கள் ஓட்டுகிறார்கள். ஐபாட் போல சிப்பிகளில் ரேடியோ கேட்கிறார்கள். யாரும் படிப்பதில்லை. சுதந்திரமாக யோசிப்பதில்லை. அரசு மக்களை இவ்வாறு ஒரு மயக்க நிலையில் வைத்து, அவர் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. நாட்டில் உள்ள எல்லா நல்ல/கெட்ட புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.

    கை மாண்டாக் இப்படி பட்ட ஒரு நகரத்தில், புத்தகங்களை கண்டால் எறிக்கும் பல தீ-வீரர்களில் ஒருவன். கதாநாயகன். தனது ஸ்டேஷனில் அலாரம் அடித்தால், யாரோ வீட்டில் புத்தகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அர்த்தம். கை தனது வாகனத்தில் சென்று அந்த வீட்டில் உள்ள புத்தகங்களை எரித்து விட்டு வரும் தீயிடுவாளன். இதை ஏன் செய்கிறோம் ஏன்று கூட அவன் கேள்வி கேட்பதில்லை. ஒரு நாள், இப்படி அலாரம் அடித்து செல்லும் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, தன் புத்தகங்களுடன் தன்னையும் எரித்து போடு என்னும் போது யோசிக்க ஆரம்பிக்கிறான்.

    இவ்வாறு தீயிட செல்லும் வீடுகளில் உள்ள சில புத்தகங்களை திருடி படிக்க ஆரம்பிக்கிறான். அவனது மேலகதிகாரி இதை கண்டுபிடித்து, 24 மணி நேர, தேவையான புத்தகங்களை படித்து விட்டு வா என்று அவகாசம் தருகிறாள். இந்நேரத்தில் ஃபாபர்(Faber) என்னும் ஒரு மனிதரை சந்திக்க, அவரின் அறிவரைப்படி செயல்படுகிறான்.

    கடைசியில், the book people என்னும் சில அறிவுஜீவிகளை சந்திக்கிறான். அப்பொழுது தான் அது வெளிவருகிறது. நாடெங்கிலும் உள்ள புத்தக பிரியர்கள், பேரிளக்கிய புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அழியாமலிருக்க, அரசுக்கு தெரியாமல், ஆளுக்கு கொஞ்சமாய் மனப்பாடம் செய்து வருவது புரிகிறது. ஆச்சரியமாகிறான். புத்தக பிரியர்களை ஒன்று சேர்த்து புத்தகங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். மீதியை பழுப்பு நிற பாரன்ஹீட் 451 புத்தகத்தில் படிக்கவும் !!

    இங்கு சயின்ஸ் பிக்-ஷனுக்கு உண்டான விஷயம் எங்குள்ளது என்று கேட்டால், புத்தகத்தை படிக்கவும். பாண்டஸிக்கும் சயின்ஸ் பிக்-ஷனுக்கும் நூலிழை தான் இடைவெளி.

    ரே ப்ராட்பரி, இதற்கு முன்னும் பின்னும் ஏராளமான நல்ல கதைகள் எழுதியிருந்தாலும், பாரன்ஹீட்451 போல மற்றது புகழடையவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லர் நாஜிப் படைகளை வைத்து, பெர்லினில் தனக்கு பிடிக்காத புத்தகங்களை எரித்த நிகழ்ச்சி தான் ரேயை இந்த புத்தகம் எழுத தூண்டியது.

    ரே சொல்வது போல், உலகத்தில் இப்படி புத்தகங்களை எரிப்பது என்பது ஒரு கலாசாரத்தை அழிக்க உதவும் விஷயம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அலெக்ஸாண்டிரியாவில் இப்படி புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். சமீபத்தில், இலங்கையிலும் பழம்பெரும் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது. பார்வையற்றோரின் ப்ரைல் புத்தகத்திலிருந்து ஹாரி பாட்டர் வரை சென்ஸாரும் புத்தக எரிப்பும் ஓன்றோடிணைந்த ஒன்று. Books : Burn or Bury என்பது வரலாற்று பாடம்.

    இன்றும் பலர் பாரன்ஹீட் 451, வருங்காலத்தில் நடக்கலாம் என்று நம்புகிறார்கள். அதி வேக டிரைவிங்கும், பாஸ்ட் புட்டும், 24 மணி நேர கேபிள் ஆக்கிரமிப்பும் உலகெங்கும் தற்போது நிஜம். அரசாங்கம் தடுப்பதே இல்லை. ஆனாலும் மக்களின் படிப்பு குறைந்து வருகிறது என்று கணிப்புகள் கணிக்கின்றன.

    ரேயை சயின்ஸ் பிக்-ஷன் எழுத்தாளர் என்று வகைபடுத்தவும் முடியாது. கதை எழுதுவார், அவ்வப்போது கவிதை பேசுவார், திடீரென்று நான்கைந்து படங்களுக்கு திரைக்கதை அமைப்பார். பின்னொரு நாள் நாடகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும், நான் பிக்-ஷனும் வரும். ஒரு மாதிரி வகைப்படுத்த முடியாத ஜந்து.

    மில்லினியத்தின் தொடக்கத்தில் எண்பது வயது நிரம்பிய போது எடுத்த பேட்டியில் ரே சொன்னது, “The great fun in my life has been getting up every morning and rushing to the typewriter because some new idea has hit me.The feeling I have every day is very much the same as it was when I was twelve.In any event, here I am, eighty years old, feeling no different, full of a great sense of joy, and glad for the long life that has been allowed me.I have good plans for the next ten or twenty years, and I hope you’ll come along.”

  • October 10, 2007

    பொய் / உண்மை

    வெகு நாட்களுக்கு பிறகு இரு நேர்த்தியான ஆங்கில பதிவுகள் படிக்க நேர்ந்தது. தொடர்ந்து படிக்கும் வெகு சில வலைப்பதிவுகளில், இவையும் அடக்கம். இந்தப் குறிப்பிட்ட பதிவுகளை படித்து, ரசித்து, சிரித்து, யோசிக்க நேரம் தேவைப்படலாம். எனக்குப் பட்டது.

    முதல் பதிவை எழுதியவர் ஹூக் மாக்லியோட்(Hugh Macleod). ஒரு கார்டூனிஸ்ட். விசிட்டிங்கார்ட்களின் பின் கார்டூன் வரைவது இவரது தொழில். மிக நேரடியாக முகத்தில் அடிக்கும் படி உண்மையை ஒரே ஒரு கார்ட்டூனில் சொல்வார். மைக்ரோசாப்டைப் பற்றி வரைந்த ஒரு தாக்குதல் கார்ட்டூனை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

    பொய் சொல்லுதல் பற்றி, 2004ல் எழுதியிருந்த ஒரு போஸ்டை, திரும்பவும் கொண்டுவந்திருந்தார். என்னவோ செய்தது.

    இரண்டாவது பதிவை எழுதியது, Freakonomics என்னும் புத்தகத்தை எழுதிய இருவரில் ஒருவர் – ஸ்டீவ் லெவிட்(Steve Levitt). சமீபத்தில் வந்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய எகனாமிக்ஸ் புத்தகம். புத்தகத்தில் சொன்னது அத்தனையும் காம்ன்சென்ஸ் தான். ஆனால் இந்த வேக உலகில், காமன்சென்ஸ் இஸ் நாட் காமன். அதனால் தான் க்ரைம் சதவிகிதத்துக்கும், ஆபார்ஷனுக்கும், முடிச்சுபோட இவர்களால் மட்டுமே முடிந்தது. கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம்.

    உண்மை சொல்லுதல் பற்றி இவர் எழுதிய பதிவு. க்ரைக்ஸ்லிஸ்ட்(craigslist.org) என்னும் ஒரு free-ads வலைதளத்தில் வந்திருந்த ஒரு பெண்மணியின் பணக்கார ஆண்களை பற்றிய ரொம்பவும் ”உண்மையான’ ஒரு கேள்வியும், அதற்கு ரொம்பவும் ”உண்மையான’ பதில் சொன்ன ஒரு பணக்கார ஆண் எகனாமிஸ்டை பற்றியது. யோசிக்க வைத்தது.

←Previous Page
1 … 74 75 76 77 78 … 319
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar