என்னை கேட்டால் கர்னாடக இசையில் இப்பொழுதுல்ல Top Three ஆசாமிகளில், சஞ்சய் சுப்பிரமணியன் தான் பர்ஸ்ட் என்பேன். சுருதி சுத்தமாகவும், ஸ்பெஷ்டமான உச்சரிப்புடனும், சங்கதியில் hip-hop பண்ணக்கூடிய திறமையுடனும் இருப்பவர். Total entertainer.
ஒரு மார்கழி இரவில், பத்மா சேஷாத்திரியில் அவர் பாடிய தோடி ராகம், இன்னும் நினைவிருக்கிறது. அதே ராகத்தை பாடிக் கொண்டே பைக்கில் வீடு திரும்பிய போது, நாய் துரத்தியது.
இம்மாத காலச்சுவடு, அவருடன் ஒரு அருமையான நேர்காணலை வெளியிட்டுள்ளது. நம் mainstream பத்திரிக்கைகள் போல் ஒரு ரெண்டு பக்க கேள்வி பதில் மாதிரி இல்லாமல் மிக விவரமான நேர்காணல் இது. கெட்டி மீசை சஞ்சயின் நேர்காணல் ஒரு கச்சேரி அனுபவம்.