மாற்றம் இல்லாததால் ஏமாற்றம்.
முகுந்தா முகுந்தாவில் மட்டும் சாதானா சர்கம் தெரிகிறார். இந்தப் பாடலில் கடைசியாக மொட்டைப் பாட்டியாக பாடும் கமலின் குரல் அவ்வளவு சிலாக்கியமில்லை.
கல்லை மட்டும் பார்த்தால் பாடலின் கடைசி நிமிடத்தில் ஹரிஹரன், பாடலுக்கு ஜஸ்டிஸ் செய்கிறார்.
இப்படி எல்லாம் தேடித் தேடி நல்ல இடங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. கமல் பாடும் ஓ சனம் என்னும் செண்டி பாங்கராவை கடைசி வரை கேட்க முடியவில்லை. இதற்காகவா அந்த ஹிமேஷ் ? நம்ம ஸ்ரீகாந்த் தேவா கூட விட்டு கலக்கியிருப்பார் போலிருக்கிறது.
கமல் படத்தில் பாடல்கள் சுமார் ரகமாயிருப்பது இது முதல் முறையல்ல. ஆகவே இது ஓகே. கேயாஸ் தியரி, வேதாந்தம் என்று படத்தை பற்றி பேசும் கமல், திரைக்கதையை சுவாரசியமாக்கியிருப்பார் என நம்பலாம்.