70களிலும் 80களிலும் ஒரு ராக் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருந்த எழுத்தாளர் சுஜாதாவைப் நம்மைபோல் இந்தத் தலைமுறை ஆட்களும் படித்து ரசிப்பதற்கு அவரின் எழுத்துத் திறமை மட்டுமே காரணம்.
தன்னுடைய சுயசரிதை என்பது ஒரு மற்றவர்களுக்கு ஒரு வேஸ்ட் ஆப் டைம் என்று சுஜாதாவே எழுதியிருந்தாலும், அவரின் பயோகிராபி பெரிய அளவில் எழுதப்பட்டு வருகிறது என்பது இந்த வருடத்தின் மிகப்பெரிய லிட்டரரி காஸ்ஸிப்.
அவரைப் பற்றி, எழுத்தைப் பற்றி ஒரு வாரத்திற்கு தினம் பத்து வரி எழுதுவதாக எண்ணம். பார்க்கலாம். பி.ஹெச்.டி வாங்கும் நோக்கமில்லாததால், இந்த பத்தி அவரை பற்றிய ஒரு எளிய அறிமுகமே.