தலை கலைந்த பொம்மை, தனியே ஆடும் ஊஞ்சல், எட்டிப் பார்க்கும் பாம்பு என்று ஒரு த்ரில்லருக்கு தேவையான அத்தனை டெக்ஸ்ட்புக் சமாசாரங்களும் இருந்தாலும், படம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்த குடும்பத்தின் தனிமையும், இயற்கையான புற சத்தங்களும், பிண்ணனி இசையில்லாமல் விடப்பட்டிருக்கும் பல காட்சிகளுமே காலர் தூக்க வைக்கும் விஷயங்கள்.
அமெரிக்காவின் வசிக்கும் தமிழ்க் குடும்பம் கடைசியாக கொஞ்சம் உருப்படியாக திரையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ப்ளாரிடாவில் பாராஸ்கீயிங் செய்து கொண்டு, கண்ணைவிட மிகப்பெரிய சன்க்ளாஸ் அணிந்து, மால்களில் கட்டிப்பிடித்து காதல் செய்து, வேகாஸ் இரவில் ஸ்னூக்கர் தட்டி விட்டு, கோல்டன் கேட்டில் டூயட் பாடுவதெல்லாம் இந்தப் படத்தை தவிர்த்து மற்ற தமிழ்/இந்தி சினிமாவில் மட்டும் தான். இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம். கிட்டத்தட்ட.
இந்த இரண்டு நிமிட, எல்லோருக்கும் தெரிந்த முடிவை நோக்கியே செல்லும் கதையை, அறிமுக டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தில் இருந்தால் ஒழிய எடுத்திருக்க முடியாது. பயப்பட வைக்கவே இல்லையென்றாலும், யதார்த்த சம்பாஷனைகளால் ரசிக்க முடிகிறது. பொழுதுபோக்கு சினிமாவில் மெசேஜ் என்று கடைசியில் க்ராபிக்ஸில் பூச்சிபூச்சியாய் புள்ளிவிபரம் போடுவதால் பயனில்லை. அல்லது உள்ளது, அவார்டுக்கு.
ப்ரசன்னாவும் ஜான் ஷியாவும் அந்த குட்டிப் பெண்ணும் தன் பங்கை செய்திருந்தாலும் படத்தில் வீக் லிங்க் சுமாராக டைலாக் டெலிவரி செய்யும் சினேகா தான். ரொம்பவே சிரமப்படாமல் ஹாலிவுட்டில் எதாவது பயிற்சி வகுப்பிற்கு போயிருந்தால் சினேகாவிற்கு இந்த மாதிரி ஆட்டு மந்தைதனம் இல்லாத தமிழ் சினிமாக்களில் சான்ஸுண்டு.