நண்பர் ராம்கி தன் இரண்டு[1,2] புத்தகங்களையும், சியாட்டல் வந்த மற்றோரு நண்பர் மூலம் அனுப்பியிருந்தார். ராம்கி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கிய சந்திப்பில் தமிழ் ப்ளாகராக அறிமுகமானார். நல்ல நண்பர். சக ரஜினி ரசிகர். எப்பொழுது கேட்டாலும் சென்னையிலிருந்து புத்தகம் வாங்கி அனுப்புவார். இதெல்லாம் தாண்டி, மு.க புத்தகத்தின் மூலம் ஒரு நல்ல எழுத்தாளராக ஆகியுள்ளார்.
படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றிய இரண்டு விஷயங்கள் இவ்விவை. கருணாநிதி என்பவர் இல்லாமல் தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு, ஜோதிகா இல்லாத சூர்யா போல இருக்கும். இந்த மனிதரை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவருடைய அனுபவதிற்காக, மதிக்கப்பட வேண்டியவர்.
அந்த விடிகாலை கைதில் ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம், ஒரு நல்ல prologue-ஆக அமைகிறது. அதன் பின் திருக்குவளையில் கருணாநிதி பிறப்பதற்கு சற்று முன்பு ஆரம்பித்து, ஜெட் ஸ்பீடில் பறக்கிறது. மாலன் சொல்வது போல, கலைஞர் வாழ்கையில் தெரியாத விஷயங்களில் புத்தகம் சுவாரசியமாகவும், தெரிந்த விஷயங்களில் கொஞ்சம் மெதுவாகவும் இருக்கிறது. ஆனால் இது எழுத்தாளரின் தவறல்ல. நமக்கு தெரிந்த விஷயங்களும் சுவாரசியமாய் இருக்குமாயின், ராம்கி exaggerate செய்திருக்கிறார் என்பது தெரிந்து விடும்.
மணி ரத்தினத்தின் இருவரில் கலைஞரின் கதாபாத்திரத்தில் கள்ளம் இல்லாமல் ஒரு வித புரட்சி மனப்பான்மை இருந்தது. ராம்கி தன் புத்தகத்தில் விலாவரியாக விவரிப்பதால், ஆரம்ப காலத்தில் பலரின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் தன் கலக எழுத்துக்களை யும் பேச்சுக்களையுமே பயன்படுத்தினார் போன்ற வாக்கியங்கள் highlight ஆகின்றன.
மையக் கரு கலைஞராக இருப்பதால், இந்தி எதிர்ப்பு, எமர்ஜென்சி, எம்.ஜி.யார் போன்ற விஷயங்களை ஊறுகாயாக தொட்டுக்கொண்டே போகிறது புத்தகம். அதே சமயத்தில் பெரியார், அண்ணா, திராவிட கழகத்தின் வளர்ச்சியும் / வீழ்ச்சியும் போன்ற எதிர்பார்க்காத விஷயங்களை சற்றே in-depth ஆக ஆராய்ந்திருப்பது, மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும்.
இரண்டு குறைகள் அல்லது opportunities for improvement ஆக நான் கருதுவது –
ஒன்று, மு.க வின் பர்சனல் வாழ்க்கையை பற்றி சில பக்கங்கள் போட்டிருந்தால், அவரின் ஒரு நல்ல பயோகிராபியாக இருந்திருக்கும். அவரின் திருமணத்திற்கு பிறகு, அவரின் personal வாழ்க்கையை பற்றி ஒன்றுமே இல்லாதது குறையே.
இரண்டு, இத்தனை புத்தகத்தையும் ராம்கியால் தானே எழுதியிருக்க முடியாது. பல புத்தகங்களையும், வரலாற்றையும் புரட்டிய பின்னரே இப்படி ஒரு சிறந்த படைப்பை உருவாக்க முடியும். அப்படி இருக்கும் போது, புத்தகத்தின் கடைசியில், Bibliography போட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.
எப்படி இருந்தாலும், இந்த புத்தகத்தை படிப்பது, தமிழ் கூறும் நல்லுலகத்தில் இருக்கும் அனைவர்களுக்கும் ஒரு sneak-peek into the political history Tamil Nadu. சரள நடைக்கும், கடின உழைப்பிற்காகவும் ராம்கிக்கு ஒரு ‘ஜெ’ !!