கௌதம் மேனனின் சிஷ்யர் கிருஷ்ணாவின் இயக்கதில் முதல் படம். சூர்யா – ஜோதிகா திருமணத்திற்க்கு ஒரு pre-cursor ஆக வரும் படம். ரஹ்மான் – வாலி காம்பினேஷனில் ஒரு totally different ரொமாண்டிக் படம். சில்லுனு ஒரு காதல், இப்படியாக பல எதிர்பார்புகளை தாங்கி வந்தது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை ஊறுகாயாய் வைத்துக் கொண்டு கன்னா பின்னாவென்று கடித்துத் துப்பி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு பாராவில், இந்த படத்தை பற்றி சொல்வதாய் உத்தேசம். பார்க்கலாம்.
சூர்யா – புது மாப்பிள்ளை பாவம். போனால் போகிறது. அந்த காலேஜ் பையன் ரோலில், ஏதோ try செய்து, தோற்றுப் போகிறார். மனைவியிடம் சூட்டிகையாய் நடிப்பதெப்படி என்று கற்றுக்கொண்டால் குற்றமில்லை. அந்த அம்மா, கொடுத்த ரோலில் கண கச்சிதமாக அசத்துகிறார். ‘லொல்லு சபா’ சந்தானம் கலக்கி ஏடுக்கிறார். தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு ‘காலேஜ் ப்ரண்டு’ சின்னி ஜெயந்த் கிடைத்திருக்கிறார்.
‘நியுயார்க் நகரம்’ பாடலை நியுயார்க் தவிர மற்ற எல்லா இடத்திலும் எடுத்து இருக்கிறார்கள். ரஹ்மானில் குரலில் உள்ள feverரை, பாட்டின் picturisation சரியாக பதிவு செய்யாமல் போனதிற்க்காகவும், வடிவேலுவின் கடி ஜோக்குகளுக்காகவும், டைரக்டரை ரெண்டு நாள் கடுங்காவலில் உள்ளே தள்ளலாம். “நாளைக்கு கார்த்தால Gelusil சாப்பிட்டா போறது” போன்ற சில யதார்த்த வசனங்களுக்காக கிருஷ்ணாவின் அடுத்த படத்தை ஏதிர்பார்ப்பில்லாமல் பார்க்கலாம். மற்றபடி மூன்று மணி நேரமும், ஒரு பத்து டாலரும் வேஸ்ட்.