காதில் பாட்டோடு டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன். ஏற்கனவே என்னுடைய ஒரு நாளைய ஓடும் கோட்டா முடிந்திருந்தது. கலைத்துப் போய் நிற்கலாம் என்று மூச்சு வாங்க யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில் அந்த பாட்டு ஆரம்பித்தது.

இந்த பாட்டைக் கேட்டு்ப்/பாடிக்கொண்டே கொஞ்சம் எக்ஸ்ட்ரா காலரிகளை காலி செய்யலாம் என்று நினைத்து, மீண்டும் முழு மூச்செடுத்து ஓட ஆரம்பித்தேன். பாட்டு ஓட, நான் ஓட, கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் ஓடின. வியர்வை வழிய வழிய மே.ல் மூ..ச்..சு வா….ங்….க, இனிமேல் சத்தியமாய் ஓட முடியாதென்று, டிரட்மிலின் அந்த ஹாண்டில் பாரை ஒரு கையிலும், வலதுபுற வயிற்றை மறு கையிலும் பிடித்து கொண்டு ஓட ஆரம்பித்த போது அந்த வரிகள் வந்தன…

தன்னாலே தாயகம் நாளையை நோக்கியே செல்லும்
நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் – சொல்லும்

அந்தக் கணத்தில் வியர்வை வழியும் கண்களினூடே சற்றே காந்தி தெரிந்தார்.