கேள்விகள் ஆயிரம்

தீயின் மனமும் நீரின் குணமும்
தெளித்துச் செய்தவள் நீ நீயா ?

தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா ?

நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா ?

வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா ?

இருவிழி உரசிட ரகசியம் பேசிட
இடிமழை மின்னல் ஆரம்பம்

பாதம் கேசம் நாபிக்கமலம்
பற்றிக்கொண்டதும் பேரின்பம்

தகதகவென எரிவது தீயா ?
சுடச்சுடவெனத் தொடுவது நீயா ?

தொடுத் தொடுவெனச் சொல்லுகின்றாயா ?
கொடுக் கொடுவெனக் கொல்லுகின்றாயா ?

http://odeo.com/flash/audio_player_tiny_black.swf
powered by ODEO

ஃபுல்ஸ் ஐ !!

இதைவிட யதார்த்தமாக அந்த டினேஜரின் மனதை திறந்துக் காட்ட முடியாது. பாட்டெழுதிய நா.முத்துக்குமாருக்கும், மெட்டிசைத்த யுவனுக்கும், பாடிய ஹரிஷ் ராகவேந்திரதருக்கும், காதலிக்கும் வாலிபர்கள் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.