எழுத்தாளனுக்கு சினிமாவில் என்ன வேலை?

jeyamohan.jpg

கொற்றவை எழுதி முடித்த கையோடு எழுத்துக்கு கொஞ்ச காலம் break விட்டதன் காரணத்திற்கு ஜெயமோகன், ஆனந்த விகடன் பேட்டியில் பதில் சொல்கிறார். கொற்றவையின் உருவக நடை மண்டைக்குள் ஏறி இறங்க மறுத்ததாலும், ஒரு பெரிய நாவல் எழுதி முடித்த சலிப்பும் முக்கிய காரணம் என்கிறார்.

நான் கடவுள் படத்தில் வசனம் எழுதுகிற அவர், இயக்குநர் பாலாவுடன் பணிபுரிகிற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு கொஞ்சம் hype கொடுக்கிறார். முக்கியமாக மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரா ஆகணும் என்பது நான் தனது சினிமா கனவு என்று தமிழ் மிடியாவில் மலையாள தூது விடுகிறார். அசோகவனம் என்னும் தனது அடுத்த நாவல் தன் அம்மா, பாட்டிகளைப் பற்றியது என்கிறார்.

பேட்டியிலிருந்து –

எழுதித் தள்ளியாச்சு, போதுமேன்னும் ஒரு எண்ணம்; நுட்பமான நாவலை யார் கூர்ந்து படிப்பாங் கன்னு கூடவே ஒரு அவநம்பிக்கை. ஒரு பெரிய நாவலை எழுதினதும் வர்ற நிறைவும் சலிப்பும் ஒரு காரணம். அப்புறம் சில தனிப்பட்ட காரணங்கள். முக்கியமா எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மரணம். அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளை என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால், இனிமேல் இலக்கிய விவாதமே வேண்டாம் என்று தோன்றியது. எழுதுவதை நான் நிறுத்தினாலும், இன்டர்நெட்டில் என் எதிரிகள் என்னைத் திட்டிக்கிட்டேதான் இருக்காங்க!
..
..
என்னைப் பொறுத்தவரைக்கும் நான் செய்கிற வேலையோட சலிப்புக்கு இந்த சினிமா வேலை பல மடங்கு மேல்! அவ்வளவுதான். என் செயல் களுக்கோ, என் எழுத்துக்கோ நான் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர முடியாது. என் எழுத்தைப் பார்த்தால் தெரியும். ‘விஷ்ணுபுரம்’ எழுதின சூட்டோட சம்பந்தமே இல்லாம ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதினேன். அதில் இருந்து ‘ஏழாம் உலகம்’ ரொம்ப தூரம். திடீர்னு பேய்க் கதைகளா எழுதினேன். ‘நிழல் வெளி கதைகள்’னு தொகுப்பா வந்தது. நாளைக்கே நான் ஒரு செக்ஸ் நாவல் எழுதக்கூடும். துப்பறியும் நாவல் எழுதலாம். ‘டிக்ஷனரி’ ஒண்ணு ரெடி பண்ணலாம். தத்துவ நூல் எழுதலாம். என் போக்கு அப்படி!’’

Create a website or blog at WordPress.com