September 30th, 2007

Haiகூ !!

புத்தக ஒட்டடை அடிக்கையில்
இ.பாவின் ராமானுஜர் – அதற்கடியில்
வீரப்பன் பயோகிராபி


kirukkal.com in ananda vikatan

இந்த வார ஆனந்த விகடனின், விகடன் வரவேற்பறை பகுதியில், இந்த கிறுக்கல்.காம் தளத்தை பற்றி ஒரு பத்தி எழுதியிருக்கிறார்கள். இதை வெங்கடரமணன் சொல்லப்போய் தான் நானறிந்தேன்.

படித்துப் பார்த்த போது, எல்லாவற்றையும் விட பிடித்திருந்தது, இந்த வரி.

சுஜாதாவின் ‘கணையாழி கடைசி பக்கங்’களை ஞாபகப்படுத்தும் சரள-மான மொழி நடை.

என்னாது சுஜாதாவா ?. இதை விட பெரிய பாராட்டு சுஜாதாவே,”நல்லா ஜல்லியடிக்கறீங்க சுப்புடு”ன்னு சொல்வதாகத்தான் இருக்க முடியும்.

போன வியாழக்கிழமையிலிருந்து, கன்னா பின்னாவென்று தளத்தின் traffic கூடிப்போய் இருக்கிறது. யார் யாரோ, “கலக்கறீங்க சார்” என்று மெயில் அனுப்புகிறார்கள். விகடனின் ரீச் தெரிகிறது. எல்லோருக்கும் நன்றி !!

“விகடன்ல எல்லாம் போட்ருக்காங்க, இன்னும் அதை update பண்ணாம இருக்கியே அசமஞ்சம்” என்று நினைப்பவர்களுக்கு, ஹிஹி !!. கூட்டம் வரும்போதே, இந்த வலைதளத்தில் எழுதித் தள்ளி, யாரையும் போரடிக்கிற எண்ணமில்லை. வழக்கம் போல எப்பொழுதெல்லாம் ஒரு நல்ல புத்தகமோ/படமோ/விஷயமோ பற்றி எழுத தோன்றி நேரமிருக்கும் போது, கண்டிப்பாய் கிறுக்கல்.

பி.கு – இப்போதைக்கு படிக்க கிறுக்கலின் பழைய பத்திகள் அல்லது இருக்கவே இருக்கு கிறுக்கலின் ஆங்கில பதிப்பு.


September 12th, 2007

ஹே !!

காதில் பாட்டோடு டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன். ஏற்கனவே என்னுடைய ஒரு நாளைய ஓடும் கோட்டா முடிந்திருந்தது. கலைத்துப் போய் நிற்கலாம் என்று மூச்சு வாங்க யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில் அந்த பாட்டு ஆரம்பித்தது.

இந்த பாட்டைக் கேட்டு்ப்/பாடிக்கொண்டே கொஞ்சம் எக்ஸ்ட்ரா காலரிகளை காலி செய்யலாம் என்று நினைத்து, மீண்டும் முழு மூச்செடுத்து ஓட ஆரம்பித்தேன். பாட்டு ஓட, நான் ஓட, கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் ஓடின. வியர்வை வழிய வழிய மே.ல் மூ..ச்..சு வா….ங்….க, இனிமேல் சத்தியமாய் ஓட முடியாதென்று, டிரட்மிலின் அந்த ஹாண்டில் பாரை ஒரு கையிலும், வலதுபுற வயிற்றை மறு கையிலும் பிடித்து கொண்டு ஓட ஆரம்பித்த போது அந்த வரிகள் வந்தன…

தன்னாலே தாயகம் நாளையை நோக்கியே செல்லும்
நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் – சொல்லும்

அந்தக் கணத்தில் வியர்வை வழியும் கண்களினூடே சற்றே காந்தி தெரிந்தார்.


ஒண்ணு எழுது இல்லாகட்டி இழுத்து மூடு என்றெல்லாம் அன்பர்கள் மெயில் அனுப்பியதால் கொஞ்சம் பயந்து போய் இந்த ‘உள்ளேன் அய்யா!!’ பத்தி. இத்தனை நாளாய் எழுத கூடாது என்று எண்ணமில்லை. எழுத விஷயமிருந்தும், நேரமில்லாமையும், நேரமில்லாமையும் மற்றும் நேரமில்லாமையும் தான் காரணங்கள். நேரமில்லை ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொன்னாலும், அது தான் காரணமாயிருக்கும் போது என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.

படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், Fight Club எழுதிய சக் பலெனிக்கின்[Chuck Palahniuk] ராண்ட். கடைசியாய் பார்த்த நல்ல படம், மெல் கிப்சனின் அப்போகாலிப்டோ. இனி எழுத நினைக்கும்(கவனிக்க – ‘நினைக்கும்’) சில விடயங்கள் -

- கடைசியாய் படித்த ‘அந்த’ புத்தகம்.
- பார்த்த அற்புத/சில ‘அதி அற்புத’ படங்கள்.
- சென்னை விஜயம்.

ஆக இன்னும் சரக்கு தீர்ந்து போய்விடவில்லை. Hang on, BRB !!